The logo for Earth Hourபுவி வெப்பம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த World Wide Fund for Nature-Australia (WWF)வும், சிட்னி மார்னிங் ஹெரால்ட் பத்திரிகையும் இணைந்து சென்ற வருடம் மார்சு 31 ஆம் தேதியன்று சிட்னி மாநகரில் மாலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை 1 மணி நேரம் மின்சாரம் உபயோகிக்காமல் தவிர்த்தனர். சுமார் 2.2 மில்லியன் மக்கள் தவிர்த்ததாக கணக்கிட்டனர். உடனே அது மற்ற நாடுகளையும் கவர்ந்தது. எனவே இந்த ஆண்டு (2008 ) நிறைய நாடுகளில், நகரங்களில் இதனை இன்று 29-03-2008 இரவு 8.00 மணி முதல் 9.00 மணி வரை மின் உபயோகத்தை தவிர்க்கவுள்ளனர். இதில் டில்லி மாநகரும் உண்டு. வலைப்பதிவர்கள் எங்கிருந்தாலும் சிரமம் பார்க்காமல்இன்று மின் உபயோகத்தை இரவு 8.00 மணி முதல் 9.00 மணி வரை தவிர்க்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறேன்.






வனம் அழிந்தால் தனம் அழியும்.
அறிவினாலும், ஆராய்ச்சியினாலும் இயற்கையைவிடச் சிறந்த ஒன்றை உருவாக்க முடியும், என்று மனித இனம் நம்புவது கேலிக்குரிய மாயை.
1 அடிக்கு மேல் காய்க்கும் தட்டைக் காய்
பப்பாளி
பல வண்ண யுபோர்பிய மலர்கள்






இருவாரங்களுக்கு முன் 3 யானைகள் இரயிலில் அடிபட்டு இறந்துபோயின. ஆழியார் அணைபகுதியில் நீர் அருந்த வந்த யாணை ஒன்று தவறி விழுந்து இறந்ததாக நாளிதழில் படித்தேன். நாம் சற்று முனைப்புடன் செயல்பட்டு அடுத்து வரும் தலைமுறையினருக்கு இவைகளை விட்டுச் செல்வது நண்பர்களே!! நமது கடமை. எனவே இவைகளுக்கு மட்டுமல்ல நமக்கும் வாழ்வாதாரம் தேவை. அதற்கு தாவரங்கள் தேவை. சிந்திப்போம்!! செயல்படுவோம். மரம் நடுவோம், வளம் பெறுவோம்.



