Showing posts with label வெட்டி வேர். Show all posts
Showing posts with label வெட்டி வேர். Show all posts

Friday, April 3, 2020

மேற்கு வங்கத்தில் புத்துயிர் பெற்ற "வெட்டிவேர்".

  5 வருட இடைவெளிக்குப்பின் மீண்டும் எழுத இருக்கிறேன். தொடர்ச்சியாக   வெளி மாநிலங்களில் மண்அரிப்பு மற்றும் வெட்டிவேருக்கான பயணங்கள், குறுங்காடுகள் வளர்ப்பு, இயற்கை விவசாயம் மற்றும் அதன் தொடர்பான கண்காணிப்பு என இருந்ததில் எழுதுவதை நிறுத்திவிட்டேன்.  தொடர்பில் இருப்பவர்களின் விருப்பம், உபயோகமான சில அனுபவங்கள், விவசாயத்திற்கு உதவும் சில யுக்திகள்,  கட்டாய வீட்டு இருப்பு மீண்டும் என்னை எழுதத் தூண்டியுது.

நதியா மாவட்டநிர்வாகத்தின் காணொளி

2015 ஆண்டு துவக்கத்தில் மேற்கு வங்க மாநில தொண்டு நிறுவனம் ஒன்றிலிருந்து ஓர் அழைப்பு. ஆற்றோரங்களில் மண்அரிப்பை தடுக்க வெட்டிவேர் பயன்பாடு குறித்து ஆலோசனைக்கு அழைத்திருந்தார்கள். 2011 ஆண்டே அவர்கள்   வெட்டிவேர் மூலம் மண்அரிப்பை தடுக்க ஆரம்பித்திருந்தார்கள். இருப்பினும் என்னை ஏன் அழைக்க வேண்டும் ?  கேள்விகளுடன் சென்ற எனக்கு பிரமிப்பு காத்திருந்தது. இந்த எளிய புல்லை வைத்து 100 நாட்கள் வேலைவாய்ப்பு  MGRNREA - "Mahatma Gandhi National Rural Employment Guarantee Act")மூலம்  அவர்கள் செய்யவிருக்கும் இந்த சமுதாய முதலீடு (Social investment) அம்மாநிலத்தை வெள்ளப் பெருக்கிலிருந்து காப்பாற்றி விவசாயத்தை மேம்படுத்தும் என மனக்கண் முன் நிறுத்திய போது பிரமிப்பு ஏற்பட்டது. 5 வருடங்கள் கடந்து இன்று அந்த சமுதாய முதலீடு பலனை தருவது மகிழ்ச்சியை தருகிறது. இதனை சிறப்பாக வடிவமைத்து செயலாற்றிய அனைத்து அரசாங்க அதிகாரிகளும், தொண்டு நிறுவனங்களும் போற்றுதலுக்கு உரியவர்கள் என்றால் அது மிகையில்லை.

Thursday, June 7, 2012

நேபாளத்தில் வெட்டிவேர் - ஒரு பார்வை


இமயமலைத் தொடரில் அமைந்த மலைகள் நிறைந்த நாடு நேபாளம். இயற்கை அன்னை தன் அழகை அள்ளி தெளித்த நாடு. பனிப்பாறைகள், மேடுபள்ளங்கள்,காடுகள் நிறைந்த நாடு. இதுபோன்ற நாடுகளின் சுற்றுச்சுழலில் மழை பெறுவதற்கும், மண் அரிப்பை கட்டுப்படுத்தி மண் வளத்தையும் நீர் வளத்தையும் காப்பாற்றி கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதில்  காடுகள் பெரும்பங்கு வகிக்கின்றன. ஆனால் தற்போதைய பொருளாதாரம்  இயற்கை வளங்களை அழித்துத்தான் மக்கள் மேம்பாடு என்று ஆன பின்பு காடுகள் அழிக்கப்படுகின்றன. விளைவு மழையளவு குறைந்து  மண் அரிப்பு ஏற்பட்டு உயிரின வளம் குறைந்து கிராம மக்களின் வாழ்வாதாரம்  கேள்விக் குறியாகிறது. அதனை மாற்றும் முயற்சியில் நேபாள வெட்டிவேர் ஆர்வலர்கள் ஒன்று சேர்ந்து நேபாள் வெட்டிவேர் நெட்ஒர்க் என்ற அமைப்பை ஏற்படுத்தி செயல் திட்டங்கள் வகுத்து செயலாற்றி வருகின்றனர். அவர்கள் "சிந்துபால்சௌக்" என்ற நீர்வழிப்பாதையை மண்சரிவிலிருந்து காப்பாற்ற எடுத்துக் கொண்ட முயற்சியை புகைப் படமாய் உங்கள் பார்வைக்கு.

Source :Sri.Ramjee shrestha Secretary
Nepal Vetiver Network (NPVN)

Friday, November 25, 2011

தமிழக கடற்கரை கிராம மக்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.


அழியும் தருவாயில் இரயுமன்துறை கிராமம்
 வெட்டிவேர் உதவியுடன் பிரேசில் நாட்டின் சா போலோ மாநிலத்திலுள்ள பெர்டியோகா என்ற கடற்கரை குடியிருப்பு பகுதியை கடலரிப்பிலிருந்து காப்பாறும் பணியை பொறியாளார். லூயிஸ் லுக்கினா அவர்கள் விளக்கிய போது மனம் ஏனோ இரயுமன்துறை கிராமத்தை நினைத்து வருந்தியது. 
கடலரிப்பில்  'பெர்டியோகா' கடற்கரை
தென்னை நார் விரிப்பில் வெட்டிவேர் நடப்பட்டுள்ளது. வருடம் 2009
சற்று வளர்ந்த நிலையில் வெட்டிவேர்
நன்கு வளர்ந்த நிலையில் வெட்டிவேர்
சுவர் போன்ற அமைப்பில் வெட்டிவேர்.   பொறியாளார். லூயிஸ் லுக்கினா ICV-5   முடித்து சென்ற பின் 2011 நவம்பர்  மாதம் 4 தேதி வலையேற்றியது.
 தென்னைநாரில் செய்யப்படும் ஜியோ டெக்ஸ் (Geo Tex) (பொள்ளாச்சி இதற்கு பெயர் பெற்றது )  என்ற விரிப்பைப் பயன்படுத்தி வெட்டிவேரை நட்டு அவர்கள் கடலரிப்பிலிருந்து குடியிருப்புக்களை காப்பாற்றி இருப்பது மனதிற்கு மகிழ்ச்சியைத் தந்தது. முக்கிய பொருட்களான வெட்டிவேரும், தென்னைநாரும் நம்மிடம் இருந்தும் உபயோகிக்காமல் இருப்பது அறியாமையா ? அல்லது ???? முடிவு நம் கையில்தான் உள்ளது. வெட்டிவேர் பாமரனின் கையிலிருந்து பெரிய கம்பெனிகளின் கைக்கு மாறியிருப்பது நிச்சயம் மிக பெரிய மாறுதல்களை உலககெங்கும் ஏற்படுத்தும். ஆனால் நாம் அதிலிருந்து பாடம் கற்கப் போகிறோமா? காலம் தான் பதில் கூறவேண்டும்.
 

Thursday, November 24, 2011

வெட்டிவேர் உதவியுடன் சரிவுகளில் மழைநீர் சேமிப்பு

முன்னாள் தலைவர் முனைவர். டேல் ராக்மிலர் உடன்

5-வது  உலக வெட்டிவேர் மாநாட்டின் (ICV-5) முடிவுகளை தொகுத்து சிறப்பு  விருந்தினர்கள் வழங்கினார்கள். அதில் முனைவர். இலட்சுமண பெருமாள்சாமி அவர்கள் இருந்தது மகிழ்ச்சியைளித்தது. உலக வெட்டிவேர் அமைப்பின் முன்னாள் தலைவர் முனைவர். டேல் ராக்மிலர் பேசும் போது வெட்டிவேர் மூலம் நிலத்தடிநீர் உயர்த்தவேண்டுமென கேட்டுக் கொண்டு என் அருகில் வந்து அமர்ந்தார். மெதுவாக எனது 2 நிமிட படம் பற்றி கூறினேன். திரையிட்ட பின் பாராட்டியதோடு மாநாடு முடிந்தவுடன் காங்கோ நாட்டிற்கு செல்வதாகவும் அங்குள்ள பள்ளி குழந்தைகளுக்கு மொழிமாற்றம் செய்து காண்பிப்பதாகவும் கூறினார். படத்தை உருவாக்கும் போது பள்ளிக் குழந்தைகளையும், நமது மலைப்பகுதிகளையும், ஆப்பிரிக்காவின் சஹாரா பகுதிகளையும் எண்ணி உருவாக்கினேன் அது நிறைவேறுவது குறித்து மிக்க மகிழ்ச்சியடைகிறேன். மாநாட்டிற்கு ஆங்கிலத்தில் பதிவு செய்தேன். நமக்காக தமிழ் வாசகங்களுடன் உங்கள் பார்வைக்கு.

Wednesday, November 16, 2011

கைவினைப் பொருட்கள் பயிற்சிப் பட்டறை – ICV 5

கேரள மாநில குழு
 தாய்லாந்து நாட்டிலிருந்து வந்த பயிற்சியாளர்கள் கைவினைப் பொருட்கள்பயிற்சிப்பட்டறையை சிறப்பாக நடத்தினர். கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்திலிருந்து வந்த சுயஉதவிக் குழு பயிற்சி பெற்றனர்.
திரு. தாமஸ் பயிற்சியின் போது.
 அவர்களில் 69 வயது நிரம்பிய திரு.தாமஸ் அவர்கள் நீண்ட பயணம் மேற்கொண்டு முழு ஈடுபாட்டுடன் கற்றுக் கொண்டது எனக்கு உற்சாகம் தந்தது. தாய்லாந்து நாட்டின் கைவினைப் பொருட்கள் பற்றி கூற வேண்டுமானால் ஒன்றை குறிப்பிட்டாக வேண்டும். அவர்கள் இலைப் பகுதியை உபயோகிக்கின்றனர். வேர் பகுதியை தொடுவதில்லை. மொத்தத்தில் அற்புதமான அந்த  படைப்புக்கள் உங்கள் பார்வைக்கு.

Wednesday, November 9, 2011

இனிய தமிழ் மக்களே உறங்கியது போதும், விழித்தெழுங்கள்.

HER ROYAL HIGHNESS PRINCESS MAHA CHAKRI SIRINDHORN
 தாய்லாந்து நாட்டின் HRH. இளவரசி மகா சக்ரி ஸ்ரீரின்ந்தான் அவர்களால் 5 வது உலக வெட்டிவேர் மாநாடு (ICV-5 ) லக்னோ நகரில் சென்ட்ரல் இன்ஸ்டிடூட் ஆப் மெடிசினல் அண்டு அரோமாடிக் பிளாண்ட்ஸ் (Central Institute of Medicinal and Aromatic Plants ) வளாகத்தில் துவக்கி வைக்கப்பட்டது. 20 க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். கொச்சியில் நடந்த மாநாட்டைக் காட்டிலும் விஞ்ஞான பூர்வமான ஆய்வுகள், பெரிய கம்பெனிகளின் கட்டுமான பணிகளை படங்களாக, வீடியோவாக காண்பித்து பிரமிப்பு ஏற்படுத்தினர்.
 சென்ட்ரல் இன்ஸ்டிடூட் ஆப் மெடிசினல் அண்டு அரோமாடிக் பிளாண்ட்ஸ்
 மாநாடு முடிந்தவுடன் நாம் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறோம் என்று மனதில் தோன்றியது. தமிழ் பெயரான வெட்டிவேர்”  என்று உலகம் முழுவதும் அறியப்பட்டாலும், பல நாடுகள் வெட்டிவேர் உதவியுடன் பில்லியன் டாலர்களை சேமித்தாலும், ஏழை எளிய மக்களுக்கு ஆப்ரிக்க நாடுகளில் உறுதுணையாக இருந்தாலும் இதன் பிறப்பிடமான தமிழ்நாட்டில் எனது பாட்டி குடிநீரில் இதனை போட்டிருப்பார்கள், எனது தாத்தா வெட்டிவேர் விசிறி வைத்திருப்பார், திருவிழாக்களில் சர்பத்தில் கலந்திருப்பார்கள்  என்ற எளிய உபயோக முறைகளை சொல்ல கேட்டிருக்கிறோம். ஆனால் 1000 + கி.மீ நீள கடற்கரையை கடலரிப்பிலிருந்து காப்பாற்ற வேண்டிய அவசியம், குறைந்த மழையளவில் குறுகிய காலத்தில் நீரை சேமிக்க வேண்டிய கட்டாயம், சுற்றுலாப் பயணிகளை கவரும் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, போன்ற முக்கிய மலை வாசஸ்தலங்களின் சாலைகளை பருவ மழையின் போது பாதுகாப்பது, கிராமப்புற சாலைகளை அதிக செலவின்றி பராமரிப்பு செய்தல், குளம், குட்டைகளில் அதிக மண் சேராமல் தடுத்தல் போன்ற காரியங்களுக்கு வெட்டிவேரை சிறப்பாகப் பயன்படுத்த முடியும். வெட்டிவேரை மையப்படுத்தி பையோ எஞ்சினியரிங் (Bio-engineering ), பையோ ரெமடியேஷன் (Bio-remediation) பையோ வால் (Bio wall ) என்று வார்த்தைகள் மற்றநாடுகளில் பவனி வர நாம் எங்கிருக்கிறோம் என்று பார்த்தால் நிச்சயம் உறக்கத்திலிருக்கிறோம் என்று சொல்லிவிடலாம். எப்போது விழிக்கப் போகிறோம் ????

Wednesday, October 26, 2011

சரிவுகளில் மழைநீர் சேமிப்பு- இரு நிமிட படம்.


வடகிழக்கு பருவ மழை ஆரம்பமாகி சில தினங்கள் ஆன நிலையில் திரும்பவும் நாம் சில எளிய முறைகளை கடைபிடித்து மழைநீரை  சேமிக்கவேண்டும். எனது பழைய பதிவு உங்கள் பார்வைக்கு. http://maravalam.blogspot.com/2007/09/blog-post_25.html

வருகின்ற 28 -30 தேதிகளில் லக்னோ நகரில் 5 வது உலக வெட்டிவேர் மாநாடு நடைபெறுகிறது. அதன் பொருட்டு வெட்டிவேர் உதவியுடன் சரிவுகளில் நீரை எளிதாக சேமிக்கலாம் என்ற 2 நிமிட படம் ஒன்றை உருவாக்கி உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். மாநாடு மிக சிறப்பாக நடைபெற்று உயர்ந்த தொழில்நுட்பங்கள் கிடைக்கப் பெற உங்கள் சார்பாகவும் இவ்வலைப் பூவின் சார்பாகவும் வாழ்த்துகிறேன்.

Wednesday, July 27, 2011

இந்தியாவில் 5 வது உலக வெட்டிவேர் மாநாடு


சரிவு பகுதியில் வெட்டிவேர் மழைநீர் சேமிக்க உதவுவதோடு மண் அரிப்பையும் தடுக்ககிறது
 5 வது உலக வெட்டிவேர் மாநாடு லக்னோ நகரில் அமைந்துள்ள சென்டரல் இன்ஸ்டிடூட் ஆப் மெடிசினல் அண்டு அரோமாடிக் பிளாண்ட்ஸ் (Central Institute of Medicinal and Aromatic Plants ) வளாகத்தில் வருகின்ற அக்டோபர் மாதம் 28-30 2011,  3 நாட்களுக்கு நடைபெறுகிறது. 
மாநாட்டின் பொருள்: வெட்டிவேரும் பருவ நிலை மாற்றமும் ("Vetiver and Climate Change")

மேலதிக தகவல்களுக்கு கீழ்கண்ட தொடர்பை உபயோகியுங்கள்
Central Institute of Medicinal and Aromatic Plants 

தொடர்பிற்கு
ICV-5 secretariat (attn. Dr. U.C. Lavania)
Central Institute of Medicinal and Aromatic Plants
P.O. CIMAP, Lucknow 226 015, India
Website: http: //icv-5.cimap.res.in
e-mail: icv-5@cimap.res.in
Phone: + 91-522-2718615

Thursday, June 30, 2011

வெட்டி (உபயோகமற்ற) வேர் ?? வெற்றிவேர் ?? உபயோகத்தைப் பொறுத்தது.

லவகா (Lavaka)” என்றழைப்படும் மண்சரிவு
 மடகாஸ்கர் ஆப்ரிக்காவின் அருகிலுள்ள நாடு. புயல், மண் சரிவிற்குப் பெயர் பெற்றது. உலகின் வென்னிலா பீன்ஸ் (ஐஸ் க்ரீம்) ஏற்றுமதியில் 58% (2006) இவர்களுடையது. 2000ம் ஆண்டு ஏற்பட்ட இரு புயல்களால் ஏற்பட்ட பாதிப்பால் வென்னிலா விவசாயம் பாதிப்பிற்கு உள்ளானது. அதனால் இந்தியாவில்  வென்னிலா விவசாயம் சூடுபிடித்தது. குறிப்பாக பொள்ளாச்சி பகுதியில் தென்னையில் ஊடுபயிராக வளர்த்தார்கள் பின் மடகாஸ்கர் வென்னிலா விவசாயம் பழைய நிலைமைக்கு வந்தவுடன் இங்கு விலை வீழ்ச்சியை கண்டது. நிறைய விவசாய அன்பர்கள் சோர்வடைந்தாரகள். ஆனால்  இந்தப் பதிவு அங்கு ஏற்பட்ட ஒரு மண் சரிவை வெட்டிவேர் கொண்டு சீரமைப்பு செய்வதைப் பற்றியது.
சரிவின் கீழ்பகுதியில் வெட்டிவேர் நடப்படுகிறது
சரிவின் நடுபகுதியிலும் மண் சமன்செய்யப்பட்டு வெட்டிவேர்
சரிவின் மேல்பகுதியிலிருந்து ஒரு பார்வை

 மிகப் பெரிய அளவில் ஏற்படும் இந்த  மண்சரிவுகளை அவர்கள் லவகா (Lavaka)” என்று அழைக்கின்றனர். சென்ற வருடம் ஏற்பட்ட ஒரு மண்சரிவை அவர்கள் வெட்டிவேர் கொண்டு சீரமைப்பு செய்தனர். அதன் புகைப்பட தொகுப்பை உலக வெட்டிவேர் அமைப்பினர் அண்மையில் வெளியிட்டார்கள். கற்கள், சிமென்ட், ஜல்லி, மணல் இல்லாமல் அதிகமான மனித உழைப்பின்றி வெற்றிகரமாக சரி செய்துள்ளனர்.

வெட்டிவேர் என்ற தமிழ் பெயரால் உலகெங்கும் அறியப்படலாம், இந்தியாவை தாயகமாக கொண்டிருக்கலாம், ஆனால் அதனை நமது பாதுகாப்பிற்கும், வளர்ச்சிக்கும் உபயோகப்படுத்தவில்லை என்றால் அது வெட்டி (உபயோக மற்ற) வேர்தான். முனைப்புடன் செயல்பட்டால் அது வெற்றிவேராக மாற்றலாம். காலம்தான் பதில் கூறவேண்டும்.


மேலதிக புகைபடங்களுக்கு கீழ்கண்ட தொடர்பை உபயோகியுங்கள்.
https://picasaweb.google.com/richard.grimshaw66/VetiverSystemForLavakaRehabilitationInMadagascar?feat=content_notification   



Monday, November 1, 2010

வடகிழக்கு பருவ மழையும், வெட்டிவேரும்..

வடகிழக்கு பருவ மழைதான் தமிழகத்தை பொறுத்தவரையில் அதிகமாக நீர் தேவையை பூர்த்தி செய்கிறது. குறைந்த நாட்களில் அதிக மழை பொழிவை தந்து இயல்பு வாழ்கையை பாதிக்கிறது. குறிப்பாக நீலகிரி மாவட்டம். ஆவணப்படுத்தபட்ட 1865 ஆம் ஆண்டு முதல் வடகிழக்கு பருவ மழையின் போதுதான் சேதம் ஏற்படுகிறது.

நீலகிரி சேதம் 1865 ஆண்டு முதல்

வெட்டிவேர் ஒரு நிரந்தர தீர்வினை தர இயலும் ஆனால் அதற்கான முயற்சிகளை எடுப்பதில்லை. இது பற்றி அங்குள்ள பிரபலமான நபர் ஒருவருடன் உரையாடிய போது வெட்டிவேர் பரவி மலையின் அழகை கெடுத்துவிடும் என்றார். தென்இந்திய வகை வெட்டிவேருக்கு முளைப்புத் திறன் இல்லை என்றாலும் அவர் வெட்டிவேரை உபயோகிக்க விரும்பவில்லை. அவர் பார்த்தீனியம், சீமைக்கருவேல் பட்டியிலில் இதனையும் வைத்திருந்தார்.



நம் நாட்டிலிருந்து அறிமுகமான வெட்டிவேர் இன்று கீழைநாடுகளில் சிறப்பாக உபயோகிப்பதை பார்க்கும் போது மனம் மகிழ்ந்தாலும் சுற்றுச்சுழலுக்கும், விவசாயத்திற்கும் அதிகம் பயன்படும் நமது வெட்டிவேரை நாமே முழுமையாக உபயோகிக்காமல் இருப்பது மன வருத்தத்தை தருகிறது. கீழைநாடு ஒன்றில் எடுக்கப்பட்ட இரு விவசாயிகள் பற்றிய மேலேயுள்ள அனிமேஷன் படம் விளக்கம் தரும்.

Monday, July 26, 2010

பிரம்மபுத்திரா நதியில் வெட்டிவேர் கொண்டு மண் அரிப்பை தடுக்கும் சிறு முயற்சி.

இந்திய நதிகளில் பிரம்மபுத்திரா நதி மிக பிரமாண்டமானது. மழைகாலங்களில் வெள்ளம் மற்றும் மண் அரிப்பு மிக அதிகமாக இருக்கும், குறிப்பாக அஸ்ஸாம் மாநிலம் இதற்கு பெயர் பெற்றது.


வெள்ளப் பெருக்கு.
அதே சமயம் குளிர் காலங்களில் தண்ணீரின் மட்டம் குறைவதால் கரை உடைந்து மண் சரிவு ஏற்பட்டு சகதி ( Slough ) ஏற்படுகிறது.
குளிர் காலங்களில் நீர் மட்டம் குறைவதால் மண் சரிவு ஏற்படுகிறது.
கடந்த 50 வருடங்களாக இந்திய அறிஞர்களும் வெளிநாட்டு அறிஞர்களும் ஆய்வுகள் செய்தாலும் சரியான ஒரு தீர்வு அவர்கள் பிரம்மபுத்திரா நதி மண் அரிப்பிற்கு தரவில்லை. குளிர் காலத்தில் நீர் குறைவாக செல்வதால் கரைமட்டதிற்கும் நீர் மட்டதிற்கும் உள்ள இடைவெளி 6-7 மீட்டர் இருக்கும். மணல் கலந்து இருக்கும் மண். சரிவு சில இடங்களில் செங்குத்தாகவும் சில இடங்களில் உள்வாங்கியும் இருக்கும்.

அஸ்ஸாம் மாநில அரசு, துணை நதியான “டைசேங்” பிரம்மபுத்திரா நதியுடன் சேரும் 500 மீட்டர் பகுதியை வெட்டிவேர் கொண்டு மண் அரிப்பைத் தடுக்க திரு. சந்தானு பட்டாச்சாரியா அவர்களிடம் ஒப்படைத்தார்கள். 28-02-2010 அன்று வெட்டிவேர் நடவு ஆரம்பிக்கப்பட்டது. நதியின் போக்கிற்கு இணையாக வரிசைக்கு வரிசை 1 மீட்டர் , செடிக்குச் செடி 10 செ.மீ இடைவெளியில் நடப்பட்டன. அது போன்று 12 வரிசைகள் நடப்பட்டன. சாண எருவும், வேம் (Vam) இரண்டும் நடவில் உடயோகிக்கப்பட்டது. மார்சு மாதம் மழை பெய்ததால் நீர் பாய்ச்சல் கொடுக்கப்படவில்லை.

பின் மெதுவாக ஆரம்பித்த மழை 17-04-2010 அன்று வெட்டிவேர் நடப்பட்ட பகுதிக்கு மேல் படகுகள் செல்லும் அளவிற்கு முழுவதுமாக நீரில் முழ்கடித்தது. இதுவரை 5 முறை முழுவதுமாக முழ்கியுள்ளது. இறுதியான வெற்றியைக் காண செப்டம்பர் வரை வெள்ள அரிப்பிற்கும், மார்சு வரை நீர் மட்ட குறைவால் ஏற்படும் மண் சரிவிற்கும் காத்திருக்க வேண்டும். இந்தப் பொழுது வரை மண் அரிப்பு ஏற்படாமல் வெட்டிவேர் அந்தப் பகுதியை காப்பாற்றியுள்ளது என்பதை மேலேயுள்ள படம் விளக்கம் தரும்.

இதே போன்று தமிழக நதிகளின் அருகே மண் அரிப்பை தடுக்கமுடியும். காலம் கனிந்து வரவேண்டும்.


திரு. சந்தானு பட்டாச்சாரியா எனக்கு அனுப்பியிருந்த தகவலை சுருக்கியும் மற்றும் முக்கியமான புகைப்படங்களையும் கொண்டு மேற்கண்ட தகவலை உங்களுக்கு அளித்திருக்கிறேன்.

திரு. சந்தானு பட்டாச்சாரியா.
திரு. சந்தானு பட்டாச்சாரியா அஸ்ஸாம் மாநில பொதுபணித் துறையில் பொறியாளர். கிழக்கு இந்திய வெட்டிவேர் அமைப்பின் கௌரவ செயல் இயக்குனர் மற்றும் ஒருங்கிணைப்பாளர். சிறந்த சுற்றுச் சுழல் ஆர்வலர். அவரும் அவர் செய்யும் அரிய பணிகளும் மேலும் சிறக்க வாழ்த்தி உங்களுடன் பகிர்ந்து கொள்ளுவதில் இவ்வலைப் பூ பெருமை கொள்ளுகிறது.

Friday, July 23, 2010

சரிவுகளில் வெட்டிவேரின் உதவியால் மண் அரிப்பைத் தடுத்து மழைநீரை சேமித்தல்.

குறைந்து வரும் பருவ மழையில் கிடைக்கின்ற நீரை நிலங்களில் எளிதாகவும் அதே சமயம் அதிக மழை பெய்தால் மண் அரிப்பையும் தடுத்து நீரை சேமிக்க முடியும். சரிவுப் பகுதியில் பொதுவாக 5 அடி முதல் 10 அடி வரை விதைப்பதில்லை வெட்டிவேரின் உதவியால் இந்த பகுதிகளிலும் விதைப்பு செய்ய முடியும். இந்த முறையில் மூன்று நன்மைகள் கிடைகின்றது.

பலத்த மழையின் போது மண் அரிப்பு தடுக்கப்படுகிறது. உழுதபகுதியில் அரிப்பு இருந்தாலும் அந்த மண் அருகிலிருக்கும் குழியில் சேமிக்கப்படுகிறது.

சரிவுகளில் மழைநீர் சேமிக்கப்படுகிறது. இதனால் கீழ் பகுதிக்கு ஈரக் கசிவு இருந்து கொண்டே இருப்பதால் அங்குள்ள பயிர்களும் செழிப்புடன் இருக்கும்.

வெட்டிவேரின் ஸ்திரத் தன்மையால் மேலும் அதிக இடத்தை விதைக்க முடியும்.
புதிதாக வெட்டிய குழியின் மேற்பகுதியில் வெட்டிவேர் நாற்றுக்கள். மண் இறுக்கமின்மை காரணமாய் வேர் எளிதில் இறங்கும்.( இந்த வருட நடவு )
சென்ற வருடங்களில் நடப்பட்ட நாற்றுக்கள். இன்று அரணாக இருக்கிறது.

அம்புக் குறியிட்ட பகுதியில் விதைக்கபடாமல் உள்ளது. வரும் ஆண்டுகளில் விதைக்கலாம்.

Wednesday, March 3, 2010

வேருக்காக வெட்டிவேர் வளர்ப்பு - ஓர் பார்வை

வேருக்காக வெட்டிவேர் வளர்ப்பு ‘சோதனை’ நன்றாகவே நடந்துள்ளது. பைகளில் வளர்த்து சுமார் 9 மாதத்தில் முடிவுக்கு கொண்டு வந்ததில் பொருளாதார ரீதியில் யார் வேண்டுமானாலும் ஆரம்பிக்கலாம் என்று தோன்றுகிறது. 1 அடி நீள வேர்களும், சுமார் 1 கிலோ எடையளவும் ( உலர வைக்காமல் ) இருந்தது. இன்னும் 3 அல்லது 5 மாதங்கள் விட்டிருந்தால் இன்னும் எடை கூடியிருக்கும் என்று தோன்றுகிறது. சில படங்கள் உங்கள் பார்வைக்காக. ‘வேருக்காக வெட்டிவேர் வளர்ப்பு’ பற்றிய பழைய பதிவினைக் காண :-
http://maravalam.blogspot.com/2009/11/blog-post_28.html

Saturday, December 5, 2009

பிரேசில் நாட்டில் தோண்டப்பட்ட வெட்டிவேர். படக் காட்சி.

பிரேசில் நாட்டில் வெட்டிவேரை யந்திரம் கொண்டு தோண்டியெடுத்துள்ளனர். வேரின் அளவு 10 அடிக்கு சற்று குறைவாக இருந்துள்ளது. இதில் முக்கிய அம்சம் வேர்கள் செடியின் அகலத்திற்கு ஏற்ப நேராக சென்றுள்ளது. ஆனால் நானறிந்த சில விவசாய நண்பர்கள் இதன் வேர்கள் நிலத்தில் பரவி சத்து அனைத்தையும் உறிஞ்சிவிடும் என்பார்கள். நீளமாக நட்டினால் வருடங்கள் செல்ல அவை உறுதியான 10 அடி உயிர் சுவர் என்பதில் ஐயமில்லை. நீலகிரி மக்கள் வெட்டிவேரை பயன்படுத்தி நீலகிரியின் எழிலை காப்பாற்ற வேண்டும் என்பதே இவ்வலைப் பூவின் விருப்பம்.

படக் காட்சி.

Saturday, November 28, 2009

வேருக்காக வெட்டிவேர் வளர்ப்பு

எனக்கு வரும் தொலைபேசி அழைப்புக்கள், மின்னஞ்சல்கள் 99% வெட்டி வேரை தனி பயிராக வளர்த்தால் (வேருக்காக) லாபம் கிடைக்குமா? எவ்வளவு வருமானம் ? எத்தனை நாட்களில் ? யாரிடம் விற்பது ? என்பது பற்றித்தான் இருக்கும். பொதுவாக வளர்ச்சி நன்றாக இருப்பினும் மண்ணின் தன்மை, நீர் ஆகியவற்றைப் பொறுத்து வேரின் நீளமும் அதன் அடர்த்தியும் இருக்கும். எனவே தோண்டி எடுப்பதற்கு நிறைய ஆட்கூலியாகும். தவிர மண்ணின் தன்மையைப் பொறுத்து வேர்கள் அறுந்துவிடாமல் எடுக்க வேண்டும். சோதனைக்காக பெரிய பையில் வளர்த்த வெட்டி வேர்.
மிக எளிமையான முறையில் வேருக்காக வளர்க்க பெரிய பைகளில் வளர்த்த பின்பு பையை அகற்றி வேரை மிக எளிதாக அறுவடை செய்யலாம். தற்சமயம் மிக குறைந்த விலையில் கிடைக்கும் அரிசி மற்றும் சிமென்ட் சாக்குப் பைகளில் வளர்த்தலாம். நல்ல வாசனையுடன் தரமாக இருக்க 1 முதல் 11/2 வருடங்கள் ஆகும். எங்கு வேண்டுமானலும் வளர்க்கலாம் குறிப்பாக மொட்டை மாடிக்களில் அதிக சூரிய ஒளியும், சமயலறை நீர் மறு உபயோகத்திற்கு கிடைப்பதாலும், அதிகமாக கரிம நிலைபாட்டில் ( Carbon sequestration ) உதவுவதால் நகரங்களில் வளர்க்க மிகவும் ஏற்றது. மிக கொஞ்சமாக மண், தேங்காய்மஞ்சு (மிக குறைந்த Ec < 1 அளவில்), சம அளவு மண் புழு உரம், வேம் இவற்றை கலந்து பைகளில் நிரப்பி 3 அல்லது 4 சிம்புகளை அல்லது நெட்பாட் நாற்றுக்களை வைக்க நமது வேருக்காக வெட்டிவேர் வளர்ப்பு ஆரம்பமாகிவிட்டது எனலாம். தேங்காய்மஞ்சு இருப்பதால் அதிகநாட்கள் நீரை தக்க வைத்துக்கொள்ளும். அதிக நீர் இருந்தாலும் பிரச்சனை இல்லை. வேம் வேரின் வளர்ச்சிக்கு நன்கு உதவும். மண் புழு உரம் செடிகளுக்கு நல்ல வளர்ச்சியை தரும். முதல் தரமான வேரினை அறுவடை செய்யலாம்.முயற்சி செய்யுங்கள். முயற்சி திருவினையாக்கும்.

Wednesday, November 11, 2009

இயற்கையின் சீற்றம் - நீலகிரி மாவட்டம்.

இயற்கை கண் இமைத்தால் கூட போதும் மனித இனம் துவண்டுவிடுகிறது. சுனாமிகளும், புயல்களும், நில நடுக்கங்களும், சென்ற 10 ஆண்டுகளில் மிக அதிகமாகி வருவது கவலை அளிக்கிறது. இந்த இடர்களும் உலகமயமாகிவிட்டது என்பதை மறந்து இன்னமும் பொருளாதாரத்தின் உச்சியில் இருக்கும் நாடுகள் இந்த சுழல் மாறுபாட்டை உணர மறுத்து செயல்படாமல் லாப நஷ்ட கணக்கையும், போட்டி மனப்பான்மையுடன் மற்ற நாடுகளை குறை கூறுவதும், நிர்பந்தம் செய்வதும் வருகின்ற சமுதாயதிற்கு நாம் செய்யும் துரோகம் என்பதில் ஐயமில்லை.

பார்க்கும் பொழுதெல்லாம் மனதை கவரும் “கேத்தி பள்ளதாக்கு” இந்த வருட வடகிழக்கு பருவ மழையில் மண் சரிவினால் மக்களுக்கு பெரும் துன்பத்தை தந்துள்ளது. நீலகிரி மாவட்டமே சோகத்திலுள்ளது. தமிழகத்தில் குறிபிட்ட இடத்தில் 24 மணி நேரத்தில் பெய்த அதிகபட்ச மழை கேத்தியில் பதிவான 820mm என பத்திரிகைகள் கூறுகின்றன. 10 கி.மீ தள்ளியுள்ள உதகை 190mm, குன்னூர் 310mm கோத்தகிரி 270mm, என்ற அளவில் மழை பெய்துள்ளது. தமிழகத்தின் சராசரி வருட மழையளவு சுமார் 950+ mm என்பதை மனதில் கொள்ளவும்.

இயற்கை தென்இந்தியாவிற்கு தந்த பரிசான வெட்டிவேர் இந்த பாதிப்பை கணிசமான அளவிற்கு நிச்சயம் குறைத்திருக்கும் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை. உலகிலுள்ள அனைத்து மக்களும் இதனை “வெட்டிவேர்” என்ற தமிழ் பெயரில்தான் அழைக்கிறார்கள் என்பது வியப்பளிக்கலாம். உலகில் 100 நாடுகளுக்கு மேல் பல்வேறு காரணங்களுக்கு வெட்டிவேரை பயன்படுத்தினாலும் மண் அரிப்புக்கு நம் தென்இந்திய வெட்டிவேரைத்தான் அனைவரும் பயன்படுத்துகிறார்கள் என்பது நமக்கு பெருமைதான். இந்த புல்லிற்காக வலையமைப்பை ( http://www.vetiver.org/ )உருவாக்க பொருளுதவி தந்து ஊக்கம் அளிப்பது தாய்லாந்து நாட்டின் மன்னர் குடும்பம். ஆனால் அதனைப் பற்றி நாமே தெரிந்து கொள்ளாமல், பயன்படுத்தாமல், பேரிடர் வரும் போது கஷ்டப்படுவது யார் குற்றம்? அலசி ஆராய்வதை விடுத்து ஆக்கப் பூர்வமாக செயல்படுத்தினால் வருங்காலத்திலாவது இழப்புக்கள் தவிர்க்கப்படும்.

எனது 2007 ஆண்டு பதிவினைக் காண :
மண் அரிப்பும் வெட்டி வேரும்
தா(வரம்) ஒன்று பயன்கள் பல.

ஓர் வேண்டுகோள்.
இந்த வலைப்பதிவை படிப்பவர்கள் உங்கள் நண்பர் ஓருவருக்காவது இக்குறிப்பிட்ட பதிவை அறிமுகம் செய்யுங்கள் (எனது சுயநலனுக்காக அல்ல) வெட்டிவேருக்காக அறிமுகப்படுத்துங்கள். இடர்களற்ற தமிழகத்தை காண்போம்.

Sunday, November 8, 2009

சரிவுகளில் மண் அரிப்பை தடுக்கும் வெட்டிவேர் - அனிமேஷன் படம்

மழை காலங்களில் சரிவுகளில் மண் அரிப்பை மிக எளிதாக வெட்டி வேர் தடுப்பதை அழகாக அனிமேஷனில் நாடுகள், மொழிகளைக் கடந்து பாமர மக்களுக்கும் புரியும் படி அதே சமயம் 2 நிமிடங்களுக்குள் எடுத்துள்ள தாய்லாந்து நாட்டின் திரு. ப்ராசிட்பொன் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். உங்கள் பார்வைக்காக அப்படம்.

Monday, September 28, 2009

மண் அரிப்பை நிறுத்தும் “வெட்டி வேர்”

சென்ற மழைக்கு தண்ணீர் அதிகம் ஓடியதால் ஓரு குறிப்பிட்ட பகுதியில் மண் அரிப்பு அதிகமாக இருந்தது. சில வெட்டிவேர் நாற்றுகளை நட்டிப் பார்த்ததில் குறிப்பிடும் அளவிற்கு மண் அரிப்பு தடுக்கப்பட்டிருந்தது. அவைகள் புகைப்படமாய் உங்கள் பார்வைக்கு.

Thursday, June 11, 2009

எளிதில் மரம் வளர்க்க சில உத்திகள்.

1970 களின் பிற்பகுதியில் என் தந்தை இளம் தேயிலை நாற்றுகளுக்கு மூங்கில் வகையை சார்ந்த கணு இடைவெளி அதிகமுள்ள “ஓடை” என்னும் துவாரமுள்ள குச்சியை வெட்டி அதனை நாற்றின் வேருக்கருகே வைத்து கோடை காலத்தில் நீரூற்றி காப்பாற்றியதை நான் பார்த்திருக்கிறேன். நாள்பட அவை மக்கிவிடும் அதற்குள் செடி நன்கு வளர்ந்து விடும். பின்னாட்களில் நாங்கள் தண்ணீர் பற்றாக்குறை மிகுந்த பகுதியில் வீடு கட்டியபோது அவர் எஞ்சிய மின்சார கம்பிகளை நுழைக்க பயன்பட்ட குழாய்களை (PVC) மேற்கண்ட முறையில் உபயோகித்து அருகிலிருந்த சாலை மரங்களுக்கும், வீட்டிலுள்ள தென்னைமரங்களுக்கும் மிக சிக்கனமாக நீரைபயன்படுத்தி வளர்த்தார். இன்று அவைகள் ஓங்கி வளர்ந்து மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றன.

இந்த முறையுடன் மேலும் சில உத்திகளைப் பயன்படுத்தி எளிதாக மரம் வளர்க்கலாம். அதனை புகைபடங்களாக பதிவிடுகிறேன். உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

குழியெடுத்து அதனுள் மக்கிய இலைதழைகளை கொஞ்சம் போடவேண்டும் இவை நீரை எளிதில் தக்கவைக்கவும், உரமாகவும் பயன்படும் அல்லது Ec அளவு ஒன்றுக்கும் குறைவான அளவிலுள்ள தென்னைநார் கழிவுகளையும் உபயோகிக்கலாம். பழைய அல்லது உபயோகமில்லாத 1 அல்லது 2 அங்குல விட்டமுள்ள குழாய்களை எடுத்து தேவையான நீளத்திற்கு வெட்டி அதனை குழியினுள் வைத்து பின் செடிகளை நடவேண்டும். கோடை காலத்தில் இந்த குழாய் வழியாக மிக குறைந்த அளவு நீர் ஊற்றினால் கூட போதும் நீர் வேர்பகுதிக்கு நேராக செல்வதால் களைகள் தோன்றுவது குறைந்து நாற்றுக்கள் நன்கு வளரும். திரவ உரங்களையும் தரலாம். சொட்டு நீர் பாசன வசதியிருந்தால் அதனை குழாயினுள் வைத்தால் போதும். நீர் பற்றாக்குறையுள்ள இடங்களுக்கு மிகவும் ஏற்றது. நடும் போது கண்டிப்பாக வேர் பூஞ்சானம் (வேம் )(Vasicular arbuscular mycorrhizas [VAM] ) உபயோகியுங்கள். அது நல்ல வேர் அமைப்பையும், சத்துக்களை கரைத்து வேர்கள் எளிதில் எடுக்கும் வண்ணம் மாற்றியும் தரும். மண்ணிலுள்ள நோய் உண்டாக்கக் கூடிய பாக்டீரியா மற்றும் புஞ்சானங்களிலிருந்து பாதுகாப்பைத் தரும்.

சரிவுப்பகுதிகளில் பிறை வடிவில் குழியெடுத்து வெட்டிவேர் நாற்றுக்களை நட்டு வையுங்கள். அவை மழைகாலங்களில் மண் அரிப்பை தடுத்து நீரை தக்க வைத்துக்கொள்ளும். வெட்டிவேரின் உதவியால் நீர் எளிதில் பூமியினுள் செல்லும். நன்கு வளர்ந்தால் மிக சிறிய தடுப்பணை போன்று நீரின் வேகத்தை தடுத்து நிறுத்தும். நாற்றுக்களை சுற்றி காய்ந்த இலைதழைகளைக் கொண்டு மூடாக்கு இடுங்கள். அவை களைகளை குறைப்பதுடன் மண் ஈரத்தை காக்கும். நிறைய மரங்களை நட்டு சுற்றுச் சுழலைக் காப்போம்.

Tuesday, December 9, 2008

இயற்கை சேதத்தைக் குறைக்க உதவும் வெட்டிவேர்.

நிஷா புயல் தமிழகத்தில் சுமார் 103 மனித உயிர்களுடன் 6700 கீ.மீ சாலை, 328 குளங்கள், 687 பாலங்கள்,402 அரசாங்க கட்டிடங்களுக்கு சேதத்தை ஏற்படுத்தி சுமார் 5,52,290 ஹெக்டர் பயிர் நாசத்தையும் செய்து மாநிலத்திற்கு பெருத்த இழப்பை ஏற்படுத்தி சென்றுள்ளது. பொருளாதார சரிவில் மேலும் ஒரு சிக்கல்.
மற்ற நாடுகளிலும் இதுபோன்று ஏற்படுகிறது அவர்கள் நம் ஊர் வெட்டிவேர் கொண்டு சேதத்தை குறைக்கிறார்கள். மடகாஸ்கர், தாய்லாந்து, மலேசியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளின் அனுபவம் PPT காட்சி கீழே.


சீனாவில் வெட்டிவேர் பற்றி காண.
சீனாவில் வெட்டிவேர்

Source : The Hindu for News and PPT Photos form TVNI