Showing posts with label சுற்றுச் சுழல். Show all posts
Showing posts with label சுற்றுச் சுழல். Show all posts

Sunday, August 11, 2013

உத்தரகாண்ட் மாநில பேரிடரும், “சிப்கோ” இயக்கமும்


மர அழிப்பிற்கு முக்கிய காரணம்  "நகர சிந்தனை"
உத்தரகாண்ட் மாநிலத்தில் மேக வெடிப்பால் (Cloud burst) ஜுன் மாதம்  ஏற்பட்ட தொடர்  மழை அந்த மாநிலத்தையே புரட்டிப் போட்டிருக்கிறது. கேதார்நாத், பத்ரிநாத். ஹரித்வார், ரிஷிகேஷ், சமோலி, ருத்ரபிராயக், என்று வெள்ள பிரளயம்  அதனால் ஏற்பட்ட நிலச்சரிவு, சாலைகள் உடைப்பு, ஆறுகளில் பெருவெள்ளம், பல கட்டிங்கள் இடிந்தது, ஆயிரக்கணக்கான உயிர்ப் பலிகள் என்பவை  நம் கற்பனைக்கு எட்டாத பேரிடர் என்பதில் ஜயமில்லை. ஒரு சம்பவம் நடந்தால் எப்படி, எப்போது என்று கேட்பதை விட, ஏன் என்று சிந்தித்தால் பிரச்சனையை எதிர்காலத்திலாவது எளிதாக கையாள முடியும்என்பார்கள்

வரலாற்று சிறப்புமிக்க கேதார்நாத் கோவில்
 வெள்ளப் பெருக்கில் ரிஷிகேஷ் சிவன் சிலை
இந்த பேரிடர் ( Disaster) ஏன்? என்ற கேள்வி விர்க்க முடியாததாக உள்ளது.  40 ஆண்டுகளுக்கு முன்பே சிப்கோ இயக்கம் தனது தொடர் போராட்டத்தால் இந்த பேரழிவை தடுக்க பல்வேறு இன்னல்களுக்கிடையே எடுத்த  முயற்சிதான் இந்த அளவிற்காவது குறைத்துள்ளது என்றால் அது மிகையில்லை. சிப்கோ இயக்கம் அதிகமாக பெண்களால் முன்னெடுக்கப்பட்டது என்பது இதன் சிறப்பு

சிப்கோ இயக்கம் பெண்களால் முன்னெடுக்கப்பட்டது 
மக்களின்  பங்களிப்பு  இயக்கத்தின் வெற்றி.
இந்த புண்ணிய பூமியை வரும் தலைமுறையினரும் வணங்கவும், பாதுகாக்கவும்  வேண்டுமானால் மரம் வெட்டுதலை தவிர்த்தல்,  மரம் வளர்ப்பு,    மலைகளை தாரை  வார்ப்பதை  தவிர்த்தல்  போன்றவை பயன் தரும்.

சிப்கோ இயக்கம் பற்றி மேலும் அறிந்து கொள்ள:

நிகமானந்தா கங்கையின் புனிதம் காக்க உயிர் துறந்த மகான்
http://www.maravalam.blogspot.in/2013/03/blog-post_22.html


Tuesday, August 6, 2013

ஹிரோஷிமா நினைவு தினம்.


ஹிரோஷிமா அணுகுண்டு வீச்சின் 68 வது நினைவு தினம். அன்று மறைந்த அப்பாவி மக்களுக்கும், அதன் தொடர்ச்சியாக இன்றும் உடல், உள ரீதியாக கஷ்டப்படும் அப்பாவி மக்களுக்கும் இந்த வலைப் பூவின் ஆழ்ந்த அஞ்சலி. 


Wednesday, June 26, 2013

“நமக்கு நாமே” நோக்கதில் மக்கள் பயணம்



தாராளமயம், உலகமயம் என மக்களுக்கெதிரான சட்டங்கள், திட்டங்கள் செய்து பன்னாட்டு நிறுவனங்கள் உலக மக்களின் வாழ்வாதாரத்தை சுரண்டும் நிலையில் மக்கள் தாங்களே வாழ்வாதாரத்தை மீட்டெடுப்பதில் முனைப்புடன் செயல்படுவது காலத்தின் கட்டாயம். குறிப்பாக நீராதாரத்தைக் காப்பதில் தமிழகத்தில் சில ஊர்களில் நடக்கும் நிகழ்வுகள் மகிழ்ச்சியைத் தருகிறது. இது ஒவ்வொரு சிற்றூர்களிலும் நிகழ்ந்தால் எங்கும் சுபிட்சம் எதிலும் நிறைவு.   

சில  நிகழ்வுகள் உங்கள் பார்வைக்கு

சேலம் மூக்கனேரி
மண்திட்டுக்ககளில் மரங்கள்


சேலம் மூக்கனேரி தூர்வாரப்பட்டு ஏரியின் நடுவில் மண்திட்டுக்கள் அமைத்து மரங்கள் வளர்க்கப்படும் அற்புதக் காட்சி.

குளம் காப்போம் குலம் காப்போம்

மண் திட்டுக்கள் உருவாக்கம்
கோவை மாநகரில் பெரியகுளத்தில் குளம் காப்போம் குலம் காப்போம் மூலம் தூர்வாரும் பணி கடந்த சிலவாரங்களாக நடைபெற்று மண் திட்டுக்கள் உருவாகியுள்ளன.

காஞ்சிபுரம் அருகே உள்ள அய்யங்கார்குளம் சஞ்சீவிராயர் கோவில் சீரமைக்கப்பட்டு வாருங்கள் காடு வளர்ப்போம் நிகழ்வு வரும் 29-06-2013 அன்று நடைபெறவுள்ளது. முடிந்தவர்கள் உற்சாகத்துடன் கலந்து கொள்ளுங்கள்.
இதுவரை அங்கே செய்த வேலைகளை பேஸ்புக்கில் பகிர்ந்து வந்துள்ளார்கள். அதன் தொகுப்பு கீழே உள்ளது.



சென்னையின் குடிநீராதாரமான செம்பரம்பாக்கம் ஏரியை சுற்றி பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணி வருகின்ற 3,4 - 08-2013 (இருதினங்கள்) நடைபெறவுள்ளது. முடிந்தவர்கள் உற்சாகத்துடன் கலந்து கொள்ளுங்கள்.

எனக்கு தெரிந்த நிகழ்வுகள் பற்றி பகிர்ந்திருக்கிறேன். வேறு நிகழ்வுகள் நடைபெறுமானால் பகிருங்கள், தெரிவியுங்கள்.



Photographs Source : Face Book & blogs

Wednesday, June 5, 2013

2013 ஆண்டு சுற்றுச்சுழல் தின கருப்பொருள்- உணவு வீணாகுதல்


சிந்தியுங்கள், சாப்பிடுங்கள், சேமியுங்கள்
இந்த வருட சுற்றுச்சுழல் தின  கருப்பொருள் உணவு வீணாக்குதல் பற்றியது. சிந்தியுங்கள், சாப்பிடுங்கள், சேமியுங்கள் (Think, Eat, Save). ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் [UN Food and Agriculture Organization (FAO)] சில புள்ளிவிபரங்கள் நம்மை வருத்தத்தில் ஆழ்த்துகின்றன. 


ஒவ்வொரு வருடமும் 1.3 பில்லியன் டன்கள் உணவுப் பொருட்களை நாம் வீணாக்குகிறோம். ஆனால் உலகின் 7 மனிதர்களில் ஒருவர் பட்டினியாக படுக்கைக்குச் செல்கிறார். 5 வயதிற்குட்ப்பட்ட 20,000கும் அதிகமான குழந்தைகள் தினமும் பசியால் மடிகின்றனர். இந்த உணவு உற்பத்தி என்பது 25% நிலம், 70% நன்னீர், 80% காடுகள் அழிப்பு மற்றும் 30% பசுமை குடில்  வாயுக்கள் வெளியேற்றத்தை உள்ளட்டக்கியது.


உணவு - நாம் உண்ணுவதற்கு ஏற்ப மாறுவதற்கு முன் உணவில் மறைந்துள்ள நீர் (Virtual Water), உணவு தூரம் (Foodmile), சமைக்க தேவையான எரிபொருள் மற்றும் நீர் (Cooking fuel+ Water),  சமைப்பவரின் திறமை + நேரம் (Cook’s ability+ Time) போன்ற பல்வேறு அம்சங்களைக் உள்ளடக்கியது. எனவே உண்ணும்  உணவை வீணாக்குவதால் மேற்கண்ட முக்கியமான அம்சங்களை வீணடிக்கிறோம் என்பதை நினைவில் கொண்டு அளவோடு உண்டு சுற்றுச்சுழல் காப்போம்.


மேலும் படிக்க:-
 

 

Friday, May 10, 2013

பரளிக்காடு “சுழல் சுற்றுலா”



கோடைவிடுமுறையில் பரபரப்பான நகர வாழ்கையிலிருந்து குளு குளு மலைவாசஸ்தலங்களை நோக்கி பயணித்து மிக அதிக தொகைகளை செலவழித்தும் உணவின்றி, நீரின்றி  கூட்ட நெரிசலில் சிக்கி கவலை தரும் பயணமாக மாறிவிடுவதுண்டு. மாறாக தமிழ்நாடு வனதுறையின் பரளிக்காடு சுழல் சுற்றுலா பரிசல் பயணம், கரைகளில் வனவிலங்குகள், அழகிய பறவைகள், ரீங்காரமிடும் வண்டுகள், ஒரு மணிநேர காட்டுப் பயணம் (Trekking), சுகமான ஆற்றுக் குளியல், சுவையான மதிய உணவு,  பழங்குடியின மக்களின் கலாச்சாரம், வாழ்க்கை முறையை அறிந்து கொள்ள வாய்ப்பு என  இயற்கையை  ஒரு நாள் முழுமையாக பரபரப்பின்றி அனுபவிக்க ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் முன்பதிவு செய்து விடுமுறையை இனிதாக கழியுங்கள்.
 
பரிசல் துறையின் முகப்புத் தோற்றம்

புங்க மரநிழலில் அமர்ந்து பேச ஆசனங்கள்

அனுபவமிக்க பரிசல் ஓட்டுனர்கள்

மனதை கொள்ளை கொள்ளும் பரிசல் சவாரி

சுவைமிக்க உணவை பரிமாறவிருக்கும் மகளிர் குழுவினர்


வழக்கமான உணவு

"ஸ்பெஷல்" உணவு ராகிக்களியுடன் கீரை

விளையாட ஊஞ்சல்

கோவையிலிருந்து பேருந்து வசதி உண்டு

இந்த உல்லாச பயணத்திற்கு நாம் தரும் தொகை பழங்குடி மக்களின் அடிப்படை தேவைகளான சாலைவசதிகள், கல்வி, சுகாதாரம், குடிநீர், விவசாயதிற்கான உதவிகள் , தொலைதொடர்பு போன்ற நல்ல காரியங்களுக்கு பயன்படுகிறது.

தொடர்புக்கு

மாவட்ட வன அலுவலகம்,
கோவை வனக் கோட்டம்,
கோவை
வனவர் 90470 51011

L. தேசப்பன்
வனச்சரக அலுவலர்
காரமடை வனச்சரகம்
94433 84982.
Website : www.coimbatore.tn.nic.in
            : Baralikadu eco tourism

Monday, April 22, 2013

புவிதினம் ஏப்ரல் 22

எனது மனதை உற்சாகப்படுத்திய, பாதித்த இரு நிகழ்வுகளை இந்த புவிதினத்தில் உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். எனக்கு ஏற்பட்ட  அதே உற்சாகம், பாதிப்பு உங்களுக்கும் ஏற்படலாம் என எண்ணுகிறேன்.
 



பரளிக்காடு என்ற இந்த  இடத்தில் இறங்கியவுடனே பிரயாணக் களைப்பு மாறி சில் என்ற காற்று தழுவிச் செல்ல என்னையும் அறியாமல் கண்களை மூடி சுத்தமான காற்றையும், சுகமான புங்கமர நிழலையும் அனுபவித்தது வர்ணிக்க வார்தைகள் இல்லை. இந்த நிலையில்தான் நமது முந்தைய சந்ததி நமக்கு இப்புவியை விட்டுச் சென்றார்கள்.

உத்தர பிரதேசத்தின் தலைநகர் லக்னோவில் மத்திய அரசின் நிறுவனமொன்றிற்கு செல்லும் போது எடுத்தது. பசுகளை தெய்வமாக வணங்கும் நம் நாட்டில் உணவிற்காக போராடும் நிலையை ஏற்படுத்தியிருக்கிறோம். இந்த நிலையில்தான் நாம் இந்த இப்புவியை அடுத்த தலைமுறைக்கு விட்டுச் செல்லப் போகிறோமா?


சிந்தித்து செயல்பட்டால் மாற்றம் தரமுடியும். முடிவு மனிதனின்  கையில்!!!!

இன்றைய நிலை குறித்த எனது பழைய பதிவு
இன்றைய கிராம நீராதாரம்.

Monday, August 6, 2012

ஹிரோஷிமா நினைவு தினம்.


ஹிரோஷிமா அணுகுண்டு வீச்சின் 67 வது நினைவு தினம். இலட்சகணக்கில் மறைந்த அப்பாவி மக்களுக்கு இவ்வலைப் பூவின் மௌன அஞ்சலி.

Of all the changes introduced by man into the household of nature, large-scale nuclear fission is undoubtedly the most dangerous and profound. As a result, ionising radiation has become the most serious agent of pollution of the environment and the greatest threat to man's survival on earth.
-E.F.Schmacher

Wednesday, June 20, 2012

ரியோ+20(Rio+20) நிலையான அபிவிருத்திக்கான ஐக்கிய நாடுகள் மாநாடு



20 ஆண்டுகளுக்கு முன்னர்   ரியோடி ஜெனிரோவில் நடைபெற்ற ஐ.நா அனைத்துலக பூமி மாநாட்டின் தொடர்ச்சியாக, தற்போது ரியோ+20 என்ற நிலையான அபிவிருத்திக்கான ஐ.நா மாநாடு இன்று தொடங்கி 3 நாட்கள் அதே ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெறவிருக்கின்றது. மாநாட்டின் இரு முக்கிய நோக்கங்களில் ஒன்று எவ்வாறு பசுமை பொருளாதாரத்தை உருவாக்கி நிலையான வளங்குன்றா வாழ்வாதாரத்தை தந்து மக்களை வறுமையிலிருந்து மீட்பது. மற்றொன்று எவ்வாறு உலக நாடுகளிடையே கட்டமைப்பை ஏற்படுத்தி வளங்குன்றா வளர்ச்சியை நிலைநிறுத்துவது.

பசுமை பொருளாதாரம் பற்றிக் காண : http://maravalam.blogspot.in/2012/06/2012.html

தற்போதைய உலக மக்களின் நிலைமை.

இன்று உலக ஜனதொகை 7 பில்லியன். 2050 இது 9 பில்லியன் ஆகும்

ஐந்தில் ஒருவர் அதாவது 1.4 பில்லியன் மக்கள் ஒரு நாளைக்கு $1.25 (சுமார்.ரூ.68/=) கீழே உள்ள தொகையில் வாழ்கிறார்கள்.

1.5 பில்லியன் மக்கள் மின்சார பெற வழியின்றி இருக்கிறார்கள்.

2.5 பில்லியன் மக்கள் கழிவறை வசதியின்றி வாழ்கிறார்கள்.

சுமார் 1 பில்லியன் மக்கள் பட்டினியாய் படுக்கைக்கு செல்கிறார்கள்.

பசுமை இல்ல வாயு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இப்படியே தொடர்ந்து உயர்ந்தால் மூன்றில் ஒரு பங்கிற்கு மேல் நன்கு அறிந்த உயிரினங்கள் மறைந்துவிடும்.


 இந்த நிலைமாறி நமது குழந்தைகளுக்கும், பேரகுழந்தைகளுக்கும் வருங்காலங்களில் அமைதியான வாழவைத்தர வேண்டுமானால் இந்த ரியோ+20 மாநாடு வெற்றி பெற வேண்டும். ரியோ+20 மாநாடு வெற்றி பெற இவ்வலைப் பூ மனமார்ந்த வாழ்த்துகளை உலக தலைவர்களுக்கு சமர்பிக்கின்றது.

“Rio+20 will be one of the most important global meetings on sustainable development in our time.”
– UN Secretary-General Ban Ki-moon


Thursday, June 7, 2012

நேபாளத்தில் வெட்டிவேர் - ஒரு பார்வை


இமயமலைத் தொடரில் அமைந்த மலைகள் நிறைந்த நாடு நேபாளம். இயற்கை அன்னை தன் அழகை அள்ளி தெளித்த நாடு. பனிப்பாறைகள், மேடுபள்ளங்கள்,காடுகள் நிறைந்த நாடு. இதுபோன்ற நாடுகளின் சுற்றுச்சுழலில் மழை பெறுவதற்கும், மண் அரிப்பை கட்டுப்படுத்தி மண் வளத்தையும் நீர் வளத்தையும் காப்பாற்றி கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதில்  காடுகள் பெரும்பங்கு வகிக்கின்றன. ஆனால் தற்போதைய பொருளாதாரம்  இயற்கை வளங்களை அழித்துத்தான் மக்கள் மேம்பாடு என்று ஆன பின்பு காடுகள் அழிக்கப்படுகின்றன. விளைவு மழையளவு குறைந்து  மண் அரிப்பு ஏற்பட்டு உயிரின வளம் குறைந்து கிராம மக்களின் வாழ்வாதாரம்  கேள்விக் குறியாகிறது. அதனை மாற்றும் முயற்சியில் நேபாள வெட்டிவேர் ஆர்வலர்கள் ஒன்று சேர்ந்து நேபாள் வெட்டிவேர் நெட்ஒர்க் என்ற அமைப்பை ஏற்படுத்தி செயல் திட்டங்கள் வகுத்து செயலாற்றி வருகின்றனர். அவர்கள் "சிந்துபால்சௌக்" என்ற நீர்வழிப்பாதையை மண்சரிவிலிருந்து காப்பாற்ற எடுத்துக் கொண்ட முயற்சியை புகைப் படமாய் உங்கள் பார்வைக்கு.

Source :Sri.Ramjee shrestha Secretary
Nepal Vetiver Network (NPVN)