Showing posts with label விவசாயம். Show all posts
Showing posts with label விவசாயம். Show all posts

Tuesday, December 31, 2013

மதிப்பிற்குரிய திரு.கோ. நம்மாழ்வார் ஐயா அவர்கள் இயற்கை எய்தினார்.

மதிப்பிற்குரிய திரு.கோ. நம்மாழ்வார் ஐயா அவர்கள் 30-12-2013 அன்று பட்டுக்கோட்டை  அருகே அத்திவெட்டியில் (பிச்சினிக்கோட்டை கிராமத்தில்)  மீத்தேன் வாயு திட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்த சென்றிருந்த போது உடல் நலக்குறைவு ஏற்பட்டு இயற்கை எய்தினார்.



இயற்கை வேளாண்மை, சூழல் பாதுகாப்பு,  நிலச்சீர்திருத்தம், தொழில்மயமாக்கம், பசுமை புரட்சி என ஒன்றிற்கொன்று தொடர்புடைய பல்வேறு தளங்களில் விமர்சனங்களையும் அதேசமயம்  ஆக்கபூர்வமான மாற்றுகளையும் பரிந்துரைத்தவர். எளிய மக்களின் விடிவெள்ளி. இவ்வலைப் பூ ஐயாவின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலையும் ஆன்மா சாந்தியடைய இறைவனையும் வேண்டிக் கொள்கிறது.

நன்றி :  Rajini Babu

Saturday, October 19, 2013

மரப்பயிர் காப்பீட்டுத் திட்டம்.



 
மாநில திட்டக்குழு துணைத் தலைவர் அவர்களால்  திட்டம் துவக்கி வைக்கப்பட்டது.

 இன்றைய விவசாய சுழலில் மரம் ஒரு காப்பீடாக தமிழக உழவர் பெருமக்களை காத்து வந்தது. தானே புயலுக்குப் பின் அந்த நம்பிக்கையும் கேள்விக்கிடமானது. பல்வேறு தொழிற்சாலைகளுடன் ஒப்பந்த சாகுபடியை அறிமுகம் செய்து தமிழகத்தில் மரப் பரப்பையும் விரிவாக்கி, உழவர் பெருமக்களையும் அரவணைத்த வனக்கல்லூரி, மேட்டுப்பாளையம் இம்முறையும் ஆபத்தபாந்தவனாக வந்து இந்த காப்பீட்டுக்கு ஒரு காப்பீடு  திட்டத்தை யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் மூலம் இந்தியாவிலேயே முதன் முறையாக தமிழகத்தில் 11-10-2013 அன்று அறிமுகபடுத்தினர். மாநில திட்டக்குழு துணைத் தலைவர் அவர்களால் மேட்டுப்பாளையத்தில் திட்டம் துவக்கி வைக்கப்பட்டது. தற்சமயம் மரம் சார்ந்த தொழில்களுக்கான 7 மரங்களுக்கு இந்த மரப்பயிர் காப்பீட்டுத் திட்டம் பயனளிக்கும்.

மரத்தின் பெயர்கள்
  1. சவுக்கு
  2. தைல மரம்
  3. மலை வேம்பு
  4. பெருமரம்
  5. குமிழ் மரம்
  6. சுபாபுல்
  7. சிசு மரம்.
எந்தெந்த வகையான விபத்துகளுக்குக் காப்பீடு
1.      தீ, புதர் தீ மற்றும் காட்டுத் தீ
2.      இடி/ மின்னல்
3.      கலகம்
4.      சூறைக்காற்று, புயல், சுழற்காற்று
5.      தண்ணீரில் மூழ்குதல்
6.      வன விலங்குகளினால் சேதம்.
 
இன்சூரன்ஸ் செய்யும் மதிப்பு
ஒரு குறிப்பிட்ட மரப்பயிர் 1 ஏக்கரில் பயிரிட ஏற்படுபம் அதிகபட்ச செலவுக்கான தொகையே இன்சூரன்ஸ் செய்யப்படும் தொகையாகும்.

காப்பீட்டுத் திட்டத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் செலவினங்கள்.
1.      நிலம் உழுதல்
2.      நாற்றுக்களின் மதிப்பு
3.      நீர் பாய்ச்சுதல்
4.      உரமிடுதல்
5.      களையெடுத்தல்
6.      மற்ற பயிர் பாதுகாப்பு செலவுகள்
7.      மற்ற தேவையான செலவுகள்

இன்சூரன்ஸ் கட்டணம்
ஒரு ஆண்டுக்கு இன்சூரன்ஸ் செய்யப்படும் மொத்தத் தொகை 1.25% (ரூ.100க்கு ரூ1.25 ) ப்ரிமியம் செலுத்த வேண்டும். இது அடிப்படை இன்சூரன்ஸ் தொகையாகும். இத்துடன் விரிவான காப்பீட்டில்  குறிபிட்ட பூச்சிகளினால் மற்றும் நோய்களினால் ஏற்படும் இழப்பையும்  இன்சூரன்ஸ் செய்ய மொத்த ப்ரிமியம் ரூ 1.60% செலுத்த வேண்டும். சேவை வரி கூடுதலானது.

மேலும் விபரங்கள் பெற
அருகிலுள்ள
யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் அலுவலகம்

அல்லது 

வன கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்
கோத்தகிரி சாலை,
மேட்டுப்பாளையம். 641 301
தொலைபேசி எண்: 04254-222010.

Source : யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட்டின் சுற்றறிக்கை

Sunday, July 7, 2013

அக்ரி இன்டெக்ஸ் 2013




ஆண்டுதோறும் நடைபெறும் அக்ரி இன்டெக்ஸ் இந்த வருடம் 11-07-2013 வியாழன் முதல் 14-07-2013 ஞாயிறு வரை கொடீசியா வளாகம் கோவையில் நடைபெறவுள்ளது.

நுழைவுக் கட்டணம்   :  ரூ.30.00 

Friday, June 14, 2013

தமிழகத்திலுள்ள அரசு தோட்டக்கலைப் பண்ணைகளின் விலாசம்


தென்மேற்கு பருவ மழை ஆரம்பித்த நிலையில் கீழ்கண்ட பண்ணைகளின் விலாசம் எல்லோருக்கும் உதவியாக இருக்கமென எண்ணுகிறேன்.

தமிழகத்திலுள்ள அரசு தோட்டக்கலைப் பண்ணைகள்
அரசு தோட்டக்கலைப் பண்ணை,
பிச்சிவாக்கம் (கிராமம் மற்றும் தபால்)
திருவள்ளூர் மாவட்டம்

அரசு தோட்டக்கலைப் பண்ணை,
18, அருள் நகர், மாதவரம் பால் பண்ணை ரோடு,
அம்பத்தூர் தாலுக்கா, திருவள்ளூர் மாவட்டம்
அரசு தோட்டக்கலைப் பண்ணை,
ஆத்தூர் (கிராமம்) செங்கல்பட்டு - காஞ்சிபுரம் ரோடு,
காஞ்சிபுரம் மாவட்டம்.
அரசு தோட்டக்கலைப் பண்ணை, மேல்கதிப்பூர், முசரவாக்கம் ரோடு, காஞ்சிபுரம் மாவட்டம்.
அரசு தோட்டக்கலைப் பண்ணை,
மேலொட்டிவாக்கம் (கிராமம்)       
காஞ்சிபுரம் மாவட்டம்.
அரசு தோட்டக்கலைப் பண்ணை,
விச்சத்தங்கள் (கிராமம்),
உத்திரமோரூர் ரோடு,
 காஞ்சிபுரம் மாவட்டம்.

அரசு தோட்டக்கலைப் பண்ணை,
கடப்பட்டு (கிராமம்), திருப்பத்தூர்  (தாலுக்கா) வேலூர் (மாவட்டம்)
அரசு தோட்டக்கலைப் பண்ணை, நவலோக் (கிராமம்) வலஜா (தாலுக்கா)
வேலூர் (மாவட்டம்)
அரசு தோட்டக்கலைப் பண்ணை, தகரக்குப்பம் (கிராமம்),
ஜவ்வாது மலை, திருவண்ணாமலை மாவட்டம்
அரசு தோட்டக்கலைப் பண்ணை, திம்மபுரம், காவேரிப்பட்டணம் (கிராமம்) தர்மபுரி மாவட்டம்
அரசு தோட்டக்கலைப் பண்ணை,
ஜீனூர் (கிராமம்), செக்கரிமேடு, 
பெங்களூர் ரோடு,
தர்மபுரி மாவட்டம்
அரசு தோட்டக்கலைப் பண்ணை, நெய்வேலி, சொரந்தூர் (கிராமம்), நெய்வேலி நகரம்,
கடலூர் மாவட்டம்
அரசு தோட்டக்கலைப் பண்ணை,  சின்னக் கண்டியக்குப்பம் (கிராமம்), விருத்தாசலம்,
கடலூர் மாவட்டம்
அரசு தோட்டக்கலைப் பண்ணை,
மருக்குலம் (கிராமம்),
திருச்சி கரூர் ரோடு, கரூர் மாவட்டம்
அரசு தோட்டக்கலைப் பண்ணை,
குடுமியான்மலை, வயலொகம் (கிராமம்),
கும்பகோணம் ரோடு,   புதுக்கோட்டை மாவட்டம் 

அரசு தோட்டக்கலைப் பண்ணை,
வல்லத்திரக்கோட்டை,
வம்பன் (கிராமம்),
புதுக்கோட்டை மாவட்டம் 
அரசு தோட்டக்கலைப் பண்ணை,
நாட்டுமங்கலம்,
அரந்தாங்கி,
பேராவூரணி ரோடு,
புதுக்கோட்டை மாவட்டம் 
அரசு தோட்டக்கலைப் பண்ணை,
உதையாட்சி (கிராமம்),
தேவக்கோட்டை,
சிவகங்கை (மாவட்டம்)
அரசு தோட்டக்கலைப் பண்ணை,        
நேமம் (கிராமம்),
சிவகங்கை (மாவட்டம்)
அரசு தோட்டக்கலைப் பண்ணை, பெரியகுளம், புதுப்பட்டி (கிராமம்), எண்டப்பாதி கிராமம் அருகில்,  தேனி மாவட்டம்
அரசு தோட்டக்கலைப் பண்ணை,
பூவாணி (கிராமம்), வில்லிப்புத்தூர் அருகில், விருதுநகர் மாவட்டம்
அரசு தோட்டக்கலைப் பண்ணை,
வெங்கடேஸ்வரன் (கிராமம்), மேல்த்தொட்டப்பட்டி கிராமம் அருகில் ‚
வில்லிப்புத்தூர்
விருதுநகர் மாவட்டம்
ப்ரயண்ட் பூங்கா, கொடைக்காணல்,
தென்மலை பகுதி,
திண்டுக்கல் மாவட்டம்
அரசு தோட்டக்கலைப் பண்ணை,
தாண்டிக்குடி கிராமம்,
திண்டுக்கல் மாவட்டம்
அரசு தோட்டக்கலைப் பண்ணை,
சிறுமலை (கிராமம்), தென்மலை பகுதி, 
திண்டுக்கல் மாவட்டம்
அரசு தோட்டக்கலைப் பண்ணை, கண்காணிப்புக்கூடம், கொடைக்காணல்,
திண்டுக்கல் (மாவட்டம்)
அரசு தோட்டக்கலைப் பண்ணை,
கொத்தப்பள்ளி (கிராமம்),
ரெட்டியார் சத்திரம்,   
திண்டுக்கல் மாவட்டம்             

        
அரசு தோட்டக்கலைப் பண்ணை,
குண்டல் (கிராமம்), கன்னியாகுமரி, நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலை, கன்னியாகுமரி மாவட்டம்
அரசு தோட்டக்கலைப் பண்ணை,
பேச்சிப்பாரை (கிராமம்), கன்னியாகுமரி (மாவட்டம்)

அரசு தோட்டக்கலைப் பண்ணை,
குற்றாலம்,
திருநெல்வேலி மாவட்டம்

அரசு தோட்டக்கலைப் பண்ணை,
கருமந்துரை,
ஆத்தூர் (தாலுக்கா),
சேலம் மாவட்டம்
அரசு தோட்டக்கலைப் பண்ணை,   
கம்பம் அருகில்,
பகடுப்பட்டு ரோடு,
ஆத்தூர் (தாலுக்கா),
சேலம் மாவட்டம்
அரசு காய்கறி விதை உற்பத்தி மையம், கருமந்துரை,
ஆத்தூர் (தாலுக்கா),       
சேலம் மாவட்டம்
அரசு தோட்டக்கலைப் பண்ணை,
ஏற்காடு,
சேலம் மாவட்டம்
அரசு தோட்டக்கலைப் பண்ணை,
முள்ளுவாடி,
புதுப்பேட்டை (வழி),
ஆத்தூர் (தாலுக்கா),
சேலம் மாவட்டம்

அரசு தோட்டக்கலைப் பண்ணை,
செம்மேடு (கிராமம்),
நாமக்கல் மாவட்டம்
அரசு தோட்டக்கலைப் பண்ணை,
பாசோலை (கிராமம்),
நாமக்கல் மாவட்டம்
அரசு தோட்டக்கலைப் பண்ணை,
அறுநூற்றுமலை, சிறுமலை மலை,
சேலம் மாவட்டம்
அரசு தோட்டக்கலைப் பண்ணை,
மணியார்குண்டம் (கிராமம்),
நாமக்கல் மாவட்டம்.         

அரசு தோட்டக்கலைப் பண்ணை,
வீரபாண்டி (கிராமம்),
ஆணைக்கட்டி,
கோயமுத்தூர் (தாலுக்கா),
கோயமுத்தூர் மாவட்டம்         

அரசு தோட்டக்கலைப் பண்ணை,    
கல்லார் (கிராமம்)
மேட்டுப்பாளையம் ரோடு, கோயமுத்தூர்
அரசு தோட்டக்கலைப் பண்ணை,
பர்லியார்,
மேட்டுப்பாளையம் சி.என்.ஆர் நீலகிரி மாவட்டம்
அரசு தோட்டக்கலைப் பண்ணை,
காட்டேரி, குன்னூர் - இராணிமேடு ரயில் நிலையம் அருகில்,
குன்னூர்,           
நீலகிரி மாவட்டம்

அரசு தோட்டக்கலைப் பண்ணை,
வெஸ்ட்வே,
குன்னூர்,
நீலகிரி - 643101



அரசு பழப்பயிர் மையம்,
வெட்வே ரயில் நிலையம், குன்னூர்,
நீலகிரி (மாவட்டம்)- 643101
             
சிம்ஸ் பார்க்,
குன்னூர்,
நீலகிரி மாவட்டம்
                              
அரசு தோட்டக்கலைப் பண்ணை,
விஜயநகரம்,
ஊட்டி,                    
நீலகிரி (மாவட்டம்) - 643001
அரசு தோட்டக்கலைப் பண்ணை,
தும்மணட்டி,
ஊட்டி,
நீலகிரி (மாவட்டம்) - 643001

அரசு தாவரவியல் பூங்கா,
ஊட்டி,
நீலகிரி (மாவட்டம்) - 643001


   
அரசு தோட்டக்கலைப் பண்ணை,
நஞ்சநாடு (கிராமம்),
நீலகிரி (மாவட்டம்) 
அரசு தோட்டக்கலைப் பண்ணை,
தேவாலா,
நடுக்கனி தபால்,
கடலூர்-643211,
நீலகிரி (மாவட்டம்) 
அரசு தோட்டக்கலைப் பண்ணை,
தொட்டபெட்டா,
ஊட்டி,
நீலகிரி (மாவட்டம்) -643001


Source : http://agritech.tnau.ac.in/ta/horticulture/horti_extension%20services_state%20horticulture%20farms_ta.html

Monday, March 18, 2013

தானியக் கீரை – எதிர்கால சத்துணவுப் பயிர்






தாவரவியல் பெயர்  :   Amaranthus hypochondriacus Linn
"ஸ்வர்ணா" என்ற இரகம்
தானியக் கீரையானது மிக வேகமாக வளரக்கூடிய தானிய வகையை  சார்ந்தது. இலைகள் கறியாகவும், விதைகள் தானியமாகவும் நேரடியாகப் பயன்படுத்தலாம். தனியாக பயிர் செய்தால் 4.5 டன்/ஹெக்டர் அளவிற்கு கீரை மகசூலும், 1-2;. டன்/ஹெக்டர் அளவிற்கு தானிய மகசூலும் பெறலாம். ஆன்டீஸ் மலைதொடரில் வாழ்ந்த பண்டைய மக்கள் இதனை புனித தானியம் எனவும், இந்தியாவில் இப்பயிரானது ராம்தானா அல்லது கடவுளின் தானியம் என்றும் அழைக்கின்றனர். வெப்பத்தை தாங்கி, பல்வேறு மண் வகைகளிலும் நன்கு வளரக்கூடியது.விதைப்பு, அறுவடை மற்றும் உர நிர்வாகம் கிட்டதட்ட சோளத்துடன் ஒத்துள்ளது. இரண்டு அடி முதல் எட்டு அடி உயரம் வரை வளரக்கூடிய இக்கீரை, மிக குறுகிய வளர்ச்சி பருவம் (80நாட்கள்) கொண்டது.
விதைகள்
தட்ப வெப்பநிலை
16°c - 35°c
மழையளவு
200 மி.மீ - 3,000 மி.மீ (ஆண்டு மழையளவு)
மண்
நல்ல வடிகால் வசதியுள்ள மண்.
நிலம்தயார் செய்தல்
3 உழவு போதுமானது.

பயன்கள் :
ஊட்டச்சத்து நிறைந்த இத்தானியக்கீரை ரொட்டி, பிஸ்கட், ஐஸ்கீரீம் தயாரிப்பிலும் இதர பேக்கிரி பொருட்கள் தயாரிப்பிலும் பயன்படுகிறது.
வடஇந்தியாவில் இத்தானிய கீரையிலிருந்து செய்யப்பட்ட "லட்டு" மிகப் பிரபலம்.
63% கார்போஹைட்ரேட் மற்றும் 12.6 -17.6% புரத சத்தும் நிறைந்த தானியக் கீரை மற்ற எல்லா வகை தானியங்களையும் விட சிறந்தது.

நார்ச்சத்து, கால்சியம், இரும்பு மற்றும் வைட்டமின் சி அதிகளவில் கண்டறியப்பட்டுள்ளதால் மற்ற கீரைகளிலிருந்து தனிச் சிறப்புடன் விளங்குகிறது.

குறைந்து வரும் மழையளவு, வெப்பத்தைத் தாங்கி வளரும் திறன், எல்லா மண் வகைகளிலும் வளரும் திறன் என பயிர் செய்வதற்கு ஏற்ற சூழலை தருவதோடு சத்து மிக்க கீரை / தானியமாகவும் இருப்பது, சந்தை வாய்ப்பும் அதிகம் இருப்பதால் தமிழகத்தில் இதனை பயிர் செய்ய முயற்சி மேற்கொள்ளாலாம்.

மேலும் விபரங்கள் பெற :
முதல்வர்
வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,
மேட்டுப்பாளையம்  - 641 301
தொலைபேசி : 04254-22010 Extn 202 (or) 222398
அலைபேசி  : 94433 77970
Photographs & Text Source: Dr.K.Kumaran, Forest College, Mtp
 

Friday, March 15, 2013

கரும்பு ..........ஒரு கையேடு



 இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் ஓர் அங்கமான கோவை கரும்பு இனப்பெருக்கு நிறுவனம் சமீபத்தில் "கரும்பு ஒரு கையேடு' என்ற புத்தகத்தினை வெளியிட்டுள்ளது.
   
 இருபத்தியோரு அத்தியாயங்கள் அடங்கிய இக்கையேட்டில், இரகங்கள், சொட்டு நீர்ப் பாசனம், வெல்லம் தயாரித்தல், இயந்திரங்கள், களை, நோய் மற்றும் பூச்சி மேலாண்மை போன்ற கரும்பு சாகுபடித் தொழில்நுட்பங்கள் விரிவாக எடுத்துக் கூறப்பட்டுள்ளன.

        இது தவிர, ஆறு அத்தியாயங்கள் விவசாயிகளின் உடனடிப் பார்வைக்கான  பயனுள்ள பல தகவல்களை (ready-reckoner type information) அளிக்கின்றன. தமிழக சர்க்கரை ஆலைகளின் தொடர்புத் தகவல்கள், விவசாயிகளுக்கான கடனுதவி, காப்பீடு மற்றும் வளர்ச்சித் திட்டங்கள், கரும்பு விவசாயிகள் மற்றும் விரிவாக்கப் பணியாளர்களுக்கான பிரத்தியேக இணையதளமான கேன் இன்போ குறித்த தகவல்கள் போன்றவை இடம் பெற்றுள்ளன.
     
 இது தவிர, கேன் இன்போ இணையதளத்தின் ' வல்லுனரைக் கேளுங்கள் " பகுதியின் சில கேள்வி பதில்கள் 'பெட்டிச் செய்திகளாக ' இடம் பெற்று, இக்கையேட்டை ஒரு முழுமையான தகவல் பெட்டகமாகுகின்றன.

      விவசாயிகள் மட்டுமின்றி விரிவாக்கப் பணியாளர்களுக்கும் , மாணவர்களுக்கும் இக்கையேடு பெரும் பலனளிக்கும்.
     கூடுதல் விவரங்களை , www.caneinfo.nic.in இணைய தள முகவரியில் பெறலாம்.
ரூ. 200 மட்டுமே  (தபால் செலவு உட்பட )
பிரதிகளுக்கு:-
 Director, Sugarcane Breeding Institute என்ற பெயருக்கு கோவையில் ஏதேனுமொரு வங்கியில் மாற்றத்தக்க வகையில் வரைவோலை (DD) எடுத்து
இயக்குனர்,
கரும்பு இனபெருக்கு நிலையம் ,
கோவை 641 007
என்ற முகவரிக்கு  அனுப்புங்கள். 

Saturday, January 5, 2013

கால்நடைக் கதிர் - இரு மாத இதழ்



துறை வாரியாக பத்திரிக்கைகள் வெளி வரும் இக்காலக் கட்டத்தில் கால்நடைக்களுக்கென்று "கால்நடைக் கதிர்" என்ற இரு மாத இதழை தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், சென்னை. வெளியிடுகிறார்கள். மாறிவரும் இச்சுழலில் விவசாயத்திற்கு உறுதுணையாக இருக்கும் இத்துறைக்கு தொழில்நுட்பம் சார்ந்த பத்திரிக்கை வருவது துறையின் வளர்ச்சிக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். அதே சமயம் பத்திரிக்கையின் வளர்ச்சிக்கு மக்களின் ஆதரவு அவசியம் தேவை. எனவே பத்திரிக்கை நம் இல்லம் தேடிவர கீழ்கண்ட முகவரிக்கு வங்கி வரைவோலை The Director of Extension Education, TANUVAS, CHENNAI-51  என்ற பெயரில் எடுத்து கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பி இதழ்களைப் பெறலாம் அல்லது வசிக்கும் ஊரிலுள்ள பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையங்கள், உழவர் பயிற்சி மையங்களை தொடர்பு கொண்டு சந்தா செலுத்தி இதழ்களைப் பெறலாம்.

ஆண்டுச் சந்தா ரூ 50.00   ரூ. 100.00
ஆயுள் சந்தா   - ரூ400.00   ரூ. 1000.00

விலாசம்:
ஆசிரியர்
கால்நடைக் கதிர்
பேராசிரியர் மற்றும் தலைவர்
கால்நடை உற்பத்தி மற்றும் மேலாண்மைத் துறை
சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி
சென்னை - 600 007

Thursday, December 27, 2012

கால்நடை மற்றும் மீன் வளர்ப்பு தொழில்நுட்ப கண்காட்சி - கோவை





விவசாயக் கண்காட்சியோடு சேர்ந்து இருந்த கால்நடை கண்காட்சி காலத்தின் அருமை, மக்களின் தேவையை கருத்தில் கொண்டு  தனியாக கால்நடை மற்றும் மீன் வளர்ப்புக்கென்றே தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் கோவையில் இந்த தொழில்நுட்ப கண்காட்சி நடத்துகிறது. மாறி வரும் வணிகம், வளர்ப்பு முறை, தீவனம், இனம், நோய்தடுப்பு, வேலை வாய்ப்பு, கருத்தரங்கம், கலந்துரையாடல்கள்  என்று பயனுள்ள பல்வேறு அம்சங்கள்  இருக்குமென்பதில்  இருவேறு கருத்துகள் இருக்கமுடியாது. பயன்படுத்தி மேன்மையடைவது நம் கையில்தான் உள்ளது.

Wednesday, July 25, 2012

பாரம்பரிய விதை திருவிழா மற்றும் கண்காட்சி கோவை.- 2012


பாரம்பரிய விதை திருவிழா மற்றும் கண்காட்சி குறித்த நேரத்தில் ஆரம்பித்து பயிர்காப்பு, சுற்றுச்சுழல், இஸ்ரேல் நாட்டு விவசாயம், எளிய கால்நடை வைத்தியம் என்று பல நிகழ்வுகள் பயனுள்ளதாக இருந்தது. முனைவர். கோ.நம்மாழ்வார் ஐயா அவர்கள் அறிவுரை இன்றைய விவசாயத்திற்கு மிகத் தேவை என்பதில் இருவேறு கருத்துக்கள் இருக்கமுடியாது. கண்காட்சியில் நிறைய பாரம்பரிய தானிய, பருப்பு மற்றும் காய்கறி விதைகள் காட்சிக்கு இருந்தது பயனுள்ளதாகவும் சிறப்பாகவும் இருந்தது. முனைவர்.கோ.நம்மாழ்வார் ஐயா அவர்கள் எழுதிய இனி விதைகளே பேராயுதம் என்னும் நூல் அனைவருக்கும் வழங்கப்பட்டது. முனைவர். நீ. செல்வம் அவர்கள் எழுதிய விவசாயத்தில் பூச்சிகளின் புரட்சி என்ற நூலை ஐயா வெளியிட அடியேன் பெற்றுக் கொண்டேன். பசுமை விகடனில் பூச்சிகளும் நம் நண்பர்களே! என்று தொடராய் வந்ததின் தொகுப்பு. நிகழ்வுகள்  படத்தொகுப்பாய் உங்கள் பார்வைக்கு.  

Friday, July 13, 2012

விதை காப்பாளர்கள் – (5)

குதிர் பெரியது.
 இந்திய விவசாயத்தின் மிக பெரிய பலமாக இருந்தது பாரம்பரிய விதை சேமிப்பு, பாதுகாத்தல் மற்றும் பகிர்தல். இந்த சேமிப்பு மற்றும் பாதுகாத்தல் முறைகள் பல அழிந்து விட்ட நிலையில் மண்ணால் செய்யப்பட்ட மிகப் பெரிய குதிர் என்ற பாதுகாப்பு பானையும் விடைப் பெற்றுவருகிறது. அதன் பிரமாண்டத்தை குறிக்க எங்க அப்பா குதிருக்குள் இல்லை என்ற பழமொழி மூலம் அறிந்து கொள்ளலாம். ஒவ்வொரு வீட்டிலும் விதை பாதுகாப்பு செய்த நம் மக்கள்  இன்று கவலையின்றி விதை உரிமையை விட்டுக் கொடுத்து கம்பெனிவிதைகளால் கலக்கம் அடைந்து வருகின்றனர்.
ஸ்வால்பார்ட் விதை காப்பக முகப்புத் தோற்றம்
இராமநாதபுரம் மாவட்டதில் அளவான குதிர்
எளிமையாகவும் வீட்டிற்கு ஒரு குதிர் என்றிருந்த விதை சேமிப்பு மறைந்து  இன்று கூட்டு முயற்சியில் மிகமிக பிரமாண்டமான அளவில் நார்வேக்கும் வடதுருவத்திற்கும் இடையேயுள்ள  உறை பனிவெளியில் அமைந்துள்ள ஸ்வால்பார்ட் (Svalbard)” என்ற இடத்தில் உலக விதைகள் காப்பகம் நிறுவியுள்ளனர். 94 நாடுகளைச் சேர்ந்த பல்வேறு வகையான தாவர விதையினங்கள் இங்கு பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன.  ஏற்கனவே 6 லட்சம் விதைகளுக்கு மேல் சேகரித்து வைத்துள்ளனர். குளிர் சாதன வசதியின்றி சுமார் 25 வருடங்கள் காப்பாற்ற முடியும் என்கிறார்கள். இதன் மறுபெயர் கூட உலகின் இறுதிநாள் விதை காப்பகம் (Doomsday seed Vault). பாரம்பரிய தானியங்கள் பல்வேறு காரணங்களால் அழிந்து வருகின்றன. நிறைய விதை காப்பகங்களை குறிவைத்து தாக்க ஆரம்பித்துள்ள மனிதன் விதை மூலம் அமைதியின்மையை ஏற்படுத்த முடியும் என நம்புகிறான். விளைவு இது போன்ற விதை காப்பகம் தேவையாகிறது. தற்போது வங்கி லாக்கர் போன்று வைத்து எடுத்துக் கொள்ளும் வசதி என்கிறார்கள். வேகமாக அழிந்து வரும் பாரம்பரிய விதைகளை காப்பாற்றி வருவது மனத்திற்கு மகழ்ச்சிதான் என்றாலும் போகப் போகத்தான் தெரியும் இவர்களின் நோக்கமும் செயலும். வீட்டிற்கு ஒரு குதிர் மறைந்து உலகத்திற்கே ஒரு லாக்கர் என்பது புதிர் தான்.

இன்றைய உலகம் புல்பூண்டு இன்றி அழிந்தாலும், அழிக்கப்பட்டாலும் இந்த காப்பகத்திலிருந்து விதைகளைப் பெற்று திரும்ப ஒரு புதிய உலகை படைக்க இயலும் என்று இதனை நிறுவியுள்ள அமைப்புக்கள் தெரிவிக்கின்றன. இனி மனிதனை அழிக்க ஆயுதங்கள் தேவையில்லை நீரும் விதையும் போதும் ..அழிவை அவன் தேடிக் கொள்வான்.


புகைப்படம் உதவி : 'குதிர்' யெஸ்.பாலபாரதி

விதை காப்பாளர்கள் (1) 
விதை காப்பாளர்கள் (2) 
விதை காப்பாளர்கள் (3)
விதை காப்பாளர்கள் (4)