Showing posts with label நூல்கள்-குறுந்தகடு. Show all posts
Showing posts with label நூல்கள்-குறுந்தகடு. Show all posts

Friday, March 15, 2013

கரும்பு ..........ஒரு கையேடு



 இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் ஓர் அங்கமான கோவை கரும்பு இனப்பெருக்கு நிறுவனம் சமீபத்தில் "கரும்பு ஒரு கையேடு' என்ற புத்தகத்தினை வெளியிட்டுள்ளது.
   
 இருபத்தியோரு அத்தியாயங்கள் அடங்கிய இக்கையேட்டில், இரகங்கள், சொட்டு நீர்ப் பாசனம், வெல்லம் தயாரித்தல், இயந்திரங்கள், களை, நோய் மற்றும் பூச்சி மேலாண்மை போன்ற கரும்பு சாகுபடித் தொழில்நுட்பங்கள் விரிவாக எடுத்துக் கூறப்பட்டுள்ளன.

        இது தவிர, ஆறு அத்தியாயங்கள் விவசாயிகளின் உடனடிப் பார்வைக்கான  பயனுள்ள பல தகவல்களை (ready-reckoner type information) அளிக்கின்றன. தமிழக சர்க்கரை ஆலைகளின் தொடர்புத் தகவல்கள், விவசாயிகளுக்கான கடனுதவி, காப்பீடு மற்றும் வளர்ச்சித் திட்டங்கள், கரும்பு விவசாயிகள் மற்றும் விரிவாக்கப் பணியாளர்களுக்கான பிரத்தியேக இணையதளமான கேன் இன்போ குறித்த தகவல்கள் போன்றவை இடம் பெற்றுள்ளன.
     
 இது தவிர, கேன் இன்போ இணையதளத்தின் ' வல்லுனரைக் கேளுங்கள் " பகுதியின் சில கேள்வி பதில்கள் 'பெட்டிச் செய்திகளாக ' இடம் பெற்று, இக்கையேட்டை ஒரு முழுமையான தகவல் பெட்டகமாகுகின்றன.

      விவசாயிகள் மட்டுமின்றி விரிவாக்கப் பணியாளர்களுக்கும் , மாணவர்களுக்கும் இக்கையேடு பெரும் பலனளிக்கும்.
     கூடுதல் விவரங்களை , www.caneinfo.nic.in இணைய தள முகவரியில் பெறலாம்.
ரூ. 200 மட்டுமே  (தபால் செலவு உட்பட )
பிரதிகளுக்கு:-
 Director, Sugarcane Breeding Institute என்ற பெயருக்கு கோவையில் ஏதேனுமொரு வங்கியில் மாற்றத்தக்க வகையில் வரைவோலை (DD) எடுத்து
இயக்குனர்,
கரும்பு இனபெருக்கு நிலையம் ,
கோவை 641 007
என்ற முகவரிக்கு  அனுப்புங்கள். 

Saturday, January 5, 2013

கால்நடைக் கதிர் - இரு மாத இதழ்



துறை வாரியாக பத்திரிக்கைகள் வெளி வரும் இக்காலக் கட்டத்தில் கால்நடைக்களுக்கென்று "கால்நடைக் கதிர்" என்ற இரு மாத இதழை தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், சென்னை. வெளியிடுகிறார்கள். மாறிவரும் இச்சுழலில் விவசாயத்திற்கு உறுதுணையாக இருக்கும் இத்துறைக்கு தொழில்நுட்பம் சார்ந்த பத்திரிக்கை வருவது துறையின் வளர்ச்சிக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். அதே சமயம் பத்திரிக்கையின் வளர்ச்சிக்கு மக்களின் ஆதரவு அவசியம் தேவை. எனவே பத்திரிக்கை நம் இல்லம் தேடிவர கீழ்கண்ட முகவரிக்கு வங்கி வரைவோலை The Director of Extension Education, TANUVAS, CHENNAI-51  என்ற பெயரில் எடுத்து கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பி இதழ்களைப் பெறலாம் அல்லது வசிக்கும் ஊரிலுள்ள பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையங்கள், உழவர் பயிற்சி மையங்களை தொடர்பு கொண்டு சந்தா செலுத்தி இதழ்களைப் பெறலாம்.

ஆண்டுச் சந்தா ரூ 50.00   ரூ. 100.00
ஆயுள் சந்தா   - ரூ400.00   ரூ. 1000.00

விலாசம்:
ஆசிரியர்
கால்நடைக் கதிர்
பேராசிரியர் மற்றும் தலைவர்
கால்நடை உற்பத்தி மற்றும் மேலாண்மைத் துறை
சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி
சென்னை - 600 007

Friday, August 31, 2012

தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட “Small is Beautiful”


உலகின் சிறந்த நூறு புத்தகங்களில் ஒன்றாக டைம் பத்திரிக்கை தேர்ந்தெடுத்த   “Small is Beautiful” என்ற புகழ் பெற்ற நூல் இப்பொழுது திரு எம். யூசுப் ராஜா அவர்களால் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு "சிறியதே அழகு" என்று தற்போது விற்பனையில் கோவை புத்தகக் கண்காட்சியில் பார்த்த போது மனதிற்கு மகிழ்ச்சியாக இருந்தது. ஏற்கனவே  நான் இந்நூலுக்கு எழுதிய விமர்சனத்தை மீண்டும் பதிவிடுகிறேன்

E.F.ஷூமாக்கர் என்ற பொருளாதார நிபுணரை நான் பொருளாதார தீர்க்கதரிசியாகத்தான் பார்க்கிறேன். சில ஆண்டுகளுக்கு முன் அவர் எழுதிய “Small is Beautiful” படித்தேன். எவ்வளவு தீர்க்கமாய் எதிர்காலத்தை கணித்திருக்கிறார் என்று வியந்ததுண்டு. ஜப்பான் சுனாமி அதன் பின் ஏற்பட்ட அணு உலை பாதிப்புக்குப் பின் மீண்டும் படிக்கவேண்டுமென்று நினைத்தபோது பரிசாக அப்புத்தகம் கிடைத்தது. 1973 ஆண்டு வெளியிடப்பட்டது அப்புத்தகம். ஆனால் உலகின் சுற்றுச்சுழல், இயற்கை விவசாயம் ( குறிப்பாக மேல் மண் Top Soil) , கல்வி, எரிபொருள், அணுசக்தி, நிலைத்த பொருளாதாரம், உதவிகள்  என்று எழுபதுகளில் அவர் பேசியது, எழுதியது இன்று நிஜமாகி வருவது அவரின் தீர்க்கமான கணிப்புக்கு சான்று. ஆட்சியாளர்களும், கண்டிப்பாக எல்லா துறை மாணவர்களும்  படிக்க வேண்டிய ஒரு நூல். மகாத்மா காந்தி அவர்களின் மேற்கோள்கள் நிறைய உண்டு.

குறிப்பு நூல்களில் இரு இந்திய நூல்களும் உண்டு
1. Art and Swadeshi By Ananda K. Coomaraswamy
2. Economy of Permanence  By J.C. Kumarappa. 

எனது பழைய பதிவு


நூல் கிடைக்குமிடம் :
எதிர் வெளியீடு
96, நியூ ஸ்கீம் ரோடு,
பொள்ளாச்சி. 642 002.
தொலைபேசி 04259-226012,
அலை பேசி 98950 05084

விலை: ரூ.180/=

Friday, May 11, 2012

நோயணுகா நெறிகளும் எளிய முறையில் மூலிகை மருந்துகளும் - இலவச மின்.நூல்


திரு.சு.முத்து அவர்களின் "நோயணுகா நெறிகளும், எளிய முறையில் மூலிகை மருந்துகளும்" என்ற இந்த இலவச மின்.நூல் மிகப் பயனுள்ள ஒன்று. நோய் நம்மை அணுகாமல் எப்படி பாதுகாப்பது, நோய் வந்த பின் எவ்வாறு அதிலிருந்து  குணமாவது, மூலிகைகளால் தீரும் நோய்களும், செய்முறை குறிப்புக்கள், மூலிகைகளின் பட்டியல் மற்றும் தாவரவியல் பெயர் அகர வரிசை என மிக எளிமையாக ஆனால் மிகப் பயனுள்ள முறையில் நாம் புரிந்து கொள்ளும் வகையில் தொகுத்துள்ளார். சிறப்பானதொரு இலவச மின் நூலை நமக்கு அளித்த திரு.சு. முத்து அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியும் பாராட்டுகளும். மின் நூல் பதிவிறக்கம் செய்ய கீழ்கண்ட தொடர்பை பயன்படுத்தவும்

Wednesday, July 13, 2011

“Economy of Permanence” By Dr.J.C .குமாரப்பா இலவச மின்நூல்.


காந்திய பொருளாதாரத்தை வலுப்படுத்தி எழுதப்பட்ட நூல். கிராம பொருளாதாரத்தையும், இயற்கை, சுற்றுச்சுழல், வாழ்வாதாரம் பற்றி 1945 ஆண்டு வெளிவந்த நூல். “Small is Beautiful”  என்ற நூலின் ஆசிரியர் குறிப்பு நூல்களில் மேற்கண்ட நூலை குறிப்பிட்டுள்ளார். மகாத்மா காந்தி அவர்கள் முன்னுரையில் இந்நூலை கவனமாக இரண்டு மூன்று முறை படித்தால்தான் முழுமையாக மதிப்பிட முடிமென்கிறார். கிராம தொழில்களின் மருத்துவர் என்றும், கிராம தொழில்களே இன்றைய சுழலில் வற்றாத பொருளாதாரத்தை தரமுடியும் என்றும் எழுதும் அவர் எளிய வாழ்கை உயர்ந்த எண்ணங்கள்”\ என்று முடிவாகக் கூறியுள்ளார்.

ரூ.35/= விலையுள்ள இந்த புத்தகத்தை கீழ் கண்ட விலாசத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

M/s Sarva Seva Sangh Parkashan
Rajghat
Varanasi  - 221 001
Ph  & Fax  : 0542- 2440385
e-mail   : sarvodayavns

காந்திய இலக்கிய சங்கம்.
மதுரை- 625 020
தொ.பேசி : 0452 - 2533957

மின் நூலாகப் படிக்க கீழ் கண்ட தொடர்பை பயன்படுத்துங்கள்.

Saturday, June 18, 2011

“Small is Beautiful” By E.F.ஷூமாக்கர். இலவச மின்நூல்

 


E.F.ஷூமாக்கர் என்ற பொருளாதார நிபுணரை நான் பொருளாதார தீர்க்கதரிசியாகத்தான் பார்க்கிறேன். சில ஆண்டுகளுக்கு முன் அவர் எழுதிய “Small is Beautiful” படித்தேன். எவ்வளவு தீர்க்கமாய் எதிர்காலத்தை கணித்திருக்கிறார் என்று வியந்ததுண்டு. ஜப்பான் சுனாமி அதன் பின் ஏற்பட்ட அணு உலை பாதிப்புக்குப் பின் மீண்டும் படிக்கவேண்டுமென்று நினைத்தபோது பரிசாக அப்புத்தகம் கிடைத்தது. 1973 ஆண்டு வெளியிடப்பட்டது அப்புத்தகம். ஆனால் உலகின் சுற்றுச்சுழல், இயற்கை விவசாயம் ( குறிப்பாக மேல் மண் Top Soil) , கல்வி, எரிபொருள், அணுசக்தி, நிலைத்த பொருளாதாரம், உதவிகள்  என்று எழுபதுகளில் அவர் பேசியது, எழுதியது இன்று நிஜமாகி வருவது அவரின் தீர்க்கமான கணிப்புக்கு சான்று. ஆட்சியாளர்களும், கண்டிப்பாக எல்லா துறை மாணவர்களும்  படிக்க வேண்டிய ஒரு நூல். மகாத்மா காந்தி அவர்களின் மேற்கோள்கள் நிறைய உண்டு.

குறிப்பு நூல்களில் இரு இந்திய நூல்களும் உண்டு
1. Art and Swadeshi By Ananda K. Coomaraswamy
2. Economy of Permanence  By J.C. Kumarappa.

அணுசக்தி
Of all the changes introduced by man into the household of nature, large-scale nuclear fission is undoubtedly the most dangerous and profound. As a result, ionising radiation has become the most serious agent of pollution of the environment and the greatest threat to man's survival on earth.

இந்தியாவும் மரங்களும்...
The Good Lord   has not disinherited any of his children and as far as India is concerned he has given her variety of trees, unsurpassed anywhere in the world. There are trees for almost all human needs. One of the greatest teachers of India was the Buddha who included in his teaching the obligation of every good Buddhist that he should plant and see to the establishment of one Tree at least every five years. As long as this was observed, the whole large of area of India was covered with trees, Free of dust, with plenty of water, plenty of shade, plenty  of  food and materials.

கல்வி ...
In fact, the belief in education is so strong that we treat it as the residual legatee of all our problems. If the nuclear age brings new dangers; if the advance of genetic engineering opens the doors to new abuses; if commercialism brings new temptations - the answer must be more and better education. The modern way of life is becoming ever more complex: this means that everybody must
become more highly educated.

தொடர்பிற்கு :

Saturday, May 14, 2011

“ஒற்றை வைக்கோல் புரட்சி” (ஆங்கிலம்) இலவச மின்நூல்


உலக விவசாயத்தை திருப்பி போட்ட நூல் என்று சொன்னால் அது மிகையில்லை. இந்த நூற்றாண்டின் இணையற்ற இயற்கை விவசாயி திரு. மாசானபு புகோக்கா அவர்கள் எழுதிய  The one-Straw Revolution  (ஒற்றை வைக்கோல் புரட்சி)  நூல் Pdf  வடிவில் கீழ்கண்ட தொடர்பில் கிடைக்கிறது.

http://www.arvindguptatoys.com/arvindgupta//onestraw.pdf

 
ஒற்றை வைக்கோல் புரட்சி க்கு நேர் எதிராக இந்தியாவில் நடந்த நெல் இரகக் கொள்ளை பற்றியும் தவறாமல் படியுங்கள். இதுவும் ஆங்கிலத்தில் உள்ளது.

The Great Gene Robbery  by Claude Alvares

Dr. Richharia's story - Crushed, but not defeated

 The one-Straw Revolution பற்றிய எனது பழைய பதிவுக்கான தொடர்பு:


முகநூலில் தகவல் அளித்த வழக்கறிஞர் திரு.சுந்தரராஜன் அவர்களுக்கு நன்றி.

Saturday, April 9, 2011

“INTENSIVE AGRICULTURE” காலாண்டு விவசாய இதழ் .

இதழின் தோற்றம்

சில நல்ல விசயங்கள்  மக்களை சென்றடைவதில் தாமதம் ஏற்படுவது இயற்கை. அதிலும் விவசாயம் சம்பந்தப்பட்டதாக இருந்தால் மேலும் தாமதமாகும். மத்திய அரசின் விவசாயத் துறையிலிருந்து வெளியாகும் “INTENSIVE AGRICULTURE” என்ற காலாண்டு இதழை கூறலாம்.

தரமான கட்டுரைகள் துறை சார்ந்த வல்லுனர்களிடமிருந்து புகைப்படங்களுடன் வருவது சிறப்பு. புள்ளி விபரங்கள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. மிகவும் குறைந்த சந்தா தொகையில் நம் வீடு தேடி இந்த ஆங்கில இதழ் வருகிறது. சந்தா செலுத்திப்  பயன் பெறுங்கள்.
பெரிதாக்கி படிவத்தை நகல் எடுங்கள்.

தனி இதழ்     - ரூ. 2/=
வருட சந்தா   - ரூ. 8/=
3 வருட சந்தா ரூ.24/=

அனுப்பவண்டிய முகவரி :-

THE EDITOR,
INTENSIVE AGRICULTURE,
MINSTRY OF AGRICULTURE,
DIRECTORATE OF EXTENSION,
KRISHI VISTAR SADAN,
PUSA,
NEW DELHI – 110 012

Thursday, July 22, 2010

தாவர வகைப்பாட்டியல் - ஒரு வரலாற்றுப் பார்வை

ஐரோப்பிய மொழியில் இருக்கும் தாவர குடும்பங்கள் பற்றியும் தாவரவியல் பெயர்கள் பற்றியும் தெரிந்து கொள்ளும் போது ஆரம்ப காலத்தில் குழப்பமாக இருக்கும். இவை தேவைதானா? என்று கூட நினைக்கத் தோன்றும். தமிழகத்திலேயே ஓரே செடிக்கு பல வட்டாரப் பெயர்கள் உண்டு. இனி நாடு பின் உலகம் என்று எடுத்தால்.... எனவே தாவரப் பெயர்கள் அவசியம் தேவை. பழகிய பின்பு எளிதாக வேற்றுமொழி நண்பர்களுடன் உரையாடும் போது சரியான தாவரவியல் பெயரை அடையாளப்படுத்தி பேசும் போது அவர்களும் சரியான தகவல்களை தரும்போது மகிழ்ச்சியாக இருக்கும். குறிப்பாக மூலிகை தாவரங்களை அடையாளப்படுத்தி பயன்படுத்தினால் மாத்திரமே நோய்க்கு மருந்து இல்லையேல்?

பேராசிரியர்.ப. மகேந்திரமணி அவர்கள்

கிறிஸ்து பிறப்பதற்கு முன் தொடங்கி நிகழ்காலம் வரை எவ்வாறு வகைபடுத்தினார்கள், பெயரிட்டார்கள், அதில் ஈடுபட்ட மேதைகள் அதனால் ஏற்பட்ட நிகழ்வுகள் போன்றவற்றை எளிய தமிழ் நடையில் பேராசிரியர் திரு. மகேந்திரமணி அவர்கள் ஓய்வுக்குப் பின் தாவர வகைப்பாட்டியல் - ஒரு வரலாற்றுப் பார்வை என்ற இந்நூலில் மிக தெளிவாக, விளக்கியிருக்கிறார்.

தாய்மொழியில் தாவரவியல் பயிலும் மாணவர்களுக்கு தாவர வகைப்பாடுகள், அவற்றை அடையாளம் காணும் முறை பற்றி அறிய இந்நூல் பெரிதும் உதவும். எளிய உதாரணங்களுடன் படவிளக்கங்கள், இணைய வலைதளங்கள் பற்றிய குறிப்புக்கள் இருப்பதால் அனைவருக்குமே இந்த நூல் பயனுள்ளதாக இருக்கும்.

கிடைக்குமிடம்:-
பேராசிரியர்.ப. மகேந்திரமணி
7/27, 4 வீதி - பாலகுருகார்டன்
கோவை - 641 004.

அலைபேசி 99945 83478.
விலை. ரூ.60/=

Tuesday, June 8, 2010

“இந்து” நாளிதழின் விவசாய கட்டுரைகள் "ஒலி" வடிவமாய் தமிழில்....

பிரபல “இந்து” நாளிதழ் நம்பக தன்மைக்கும் தரத்திற்கும் பெயர் பெற்றது. ஒவ்வொரு வியாழக் கிழமையன்றும் பல்வேறு விவசாய கட்டுரைகளை தாங்கி வரும். தரமான அந்த கட்டுரைகள் தமிழில் கிடைத்தால் தமிழக விவசாயிகளுக்கு அதிக பயன் கிடைக்குமே என்ற ஆதங்கம் இருக்கும். அதுவும் கேட்கும் படி ஆங்கிலம் மற்றும் தமிழ் என இரு மொழிகளிலும் “ஒலி” வடிவத்தில் அவர்களது வலைதளத்தில் கிடைப்பது மிக்க மகிழ்ச்சியை தருகிறது. பழைய கட்டுரைகளையும் ஒலி வடிவத்தில் நாம் கேட்கலாம் என்பது மேலும் சிறப்பு.

ஓர் வேண்டுகோள் :
இச்செய்தியினை உங்கள் விவசாய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

கேட்டு பயன் பெற கீழ்கண்ட வலைமுகவரியை உபயோகியுங்கள்.
http://blogs.thehindubusinessline.com/audio/?cat=24

Monday, April 12, 2010

ஒடியன் --- பழங்குடி மக்களின் வாழ்க்கை போராட்ட கவிதை தொகுப்பு.

திரு. லட்சுமணன் அவர்களின் இந்த கவிதை தொகுப்பு எழுத்து வடிவம் இல்லாத இருளர் மொழியின் உச்சரிப்பில் தமிழில் எழுதப்பட்ட கவிதை தொகுப்பு. கவிதைகளின் முடிவில் குறிப்புகள் தந்திருப்பது வாசகர்களுக்கு செய்திகள் மிக தெளிவாக சென்றடைய வேண்டும் என்ற எண்ணமும் அதே சமயம் மெல்ல மெல்ல மறைந்து வரும் ஒரு மொழியை ஆவணப்படுத்தியதும் பாராட்டுதலுக்குரியது.

அட்டைபடம் வேட்டுக்கல் விளைச்சலைக் காக்க கம்பிகளால் காட்டைச் சுற்றி ஆதிவாசிகள் ஏற்படுத்தும் பாதுகாப்புக் கருவி.
வரலாறுகள் எப்போதும் வெற்றி பெற்றவனால் மட்டுமே ஆவணப்படுத்தப்படுகிறது. தோல்வியுற்றவர்களின் வரலாறுகள் இருட்டடிப்பு செய்யப்படும். ஆனால் “ஒடியன்” வித்தியாசமாய் தோல்வியுற்ற கோவமூப்பனின் வாரிசுகளின் நியாயமான வாழ்கை போராட்டத்தையும், ஏமாற்றபட்டதையும் தெள்ளத் தெளிவாக கீழ்நாடுக்காரனுக்கு அவன் முன்னோர்களின் செயலை புரியவைக்கிறது.

சுரண்டுவதில் மேற்கத்திய நாட்டவர்களுக்கு எந்தவித்திலும் கீழ்நாடுக்காரன் சளைத்தவன் இல்லை என்பதை இக்கவிதை நெற்றியிலடித்தாற் போல் கூறுகிறது.

அஞ்சு இட்டிலிக்கூ
ஆறு ஏக்கரே கொடாத்து
காலேவாயிலே
கல்லூ சொமக்கே நா

மண்ணுபாசோ விடுகாதில்லே

ம்க்கூம்
எல்லா சூளேயும்
இச்சாதாஞ் செவக்கு

ஐந்து இட்டிலிக்கு விலை ஆறுஏக்கர். இருளனிடம் கைப்பற்றிய நிலத்தில் செங்கல் சூளை அமைக்கிறார்கள் கீழ்நாடுக்காரர்கள். மண்ணை பிரிய மனம் இல்லாத இருளன் அதே சூளையில் ரத்தம் சுண்ட மண் சுமக்கிறான். பக்கம்: 19 ========================================

நமது கல்வி முறையை கிண்டலாடிக்கும் இந்த கவிதை அவர்கள் படிக்கவேண்டும் என்ற ஆதங்கத்தை வெளிபடுத்துகிறது.

பத்தாவது வருகாக்குள்ளயே
செத்து செத்து பொழைக்கோ
‘ரிசல்டு கொறஞ்சா
ரிவிட்டே அடிப்பாங்க’ ன்னு
பாதியிலே தொரத்துகா

பாஸோ பெயிலோ
படிக்கோனு நாங்க

தொடகே
ஊர் கூட்டுகயிலே
எட்மாஸ்டரையும் போட்டுக்கோ.

தொடகே = பெரியம்மா
ஊர் கூட்டுகயிலே = ஊருக்குள் நோய் அதிகரித்தாலோ மழை பொய்த்தாலோ ஆகாத பொருட்களையெல்லாம் சேகரித்து ஊரின் எல்லையில் போட்டுவிடுவார்கள். (அப்படி எட்மாஸ்டரையும் போடவண்டும்)
பக்கம் : 49
====================================

கவிஞரின் சாடல்

ஒடியன்- தாயின் கர்ப்பத்திலிருந்து சிசுவை எடுத்து தைலம் செய்யும் மந்திரவாதி.

இன்று இயற்கையின் மடியிலிருந்து வனத்தையும் உயிர்களையும் திட்டமிட்டு சிதைத்து அழிக்கும் ஒடியன்கள் கீழ்நாட்டிலிருந்து வந்து மலை முழுவதும் நிறைந்து கிடக்கிறார்கள். பக்கம் : 60

கிடைக்குமிடம்

மணிமொழி பதிப்பகம்,
220 - A முல்லை வீதி,
தந்தை பெரியார் நகர்,
போளூர் சாலை
திருவண்ணாமலை - 606 601

தொலைபேசி: 04175 – 251980
மின்னஞ்சல் : kurinji_flower@yahoo.co.in

விலை. ரூ.50/=

Monday, January 4, 2010

சுரபாலர் அருளிய விருட்ச ஆயுர்வேதம் - 1000ஆண்டுகளுக்குப் பின் தமிழில்.

இந்த அற்புதமான நூல் கி.பி. பத்தாம் நூற்றாண்டில் சுரபாலர் அவர்களால் சம்ஸ்கிருதத்தில் எழுத்துருவம் பெற்றது. பின்னாட்களில் கிழக்கிந்திய கம்பெனியின் மூலம் ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு மொழி பெயர்க்கப்படாமல் சுமார் 200 ஆண்டுகள் இருந்தது. பின் டாக்டர். நளினி சதாலே அவர்களால் 1996 ஆண்டு ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. அதன் தமிழாக்கத்தை இயற்கை விஞ்ஞானி..ஆர்.எஸ். நாராயணன் மொழிபெயர்த்து 2005 ஆண்டு வெளியிட்டிருக்கிறார். திரு. ஆர்.எஸ். நாராயணன் அவரது மாடித்தோட்டத்தில்
அதிலிருந்து சில பாடல்கள்

பத்து புத்திரர்களைப் பெற்று
அவர்கள் செய்யும் தந்தைக் கடன்களை விட ஐந்து
மரங்கள் நட்டு அவை வழங்கும்
இலை, மலர், கனிகள், மேலானவை.
பாடல் எண் :5

பத்து கிணறுகள் ஒரு குளத்திற்குச் சமம்
பத்து குளங்கள் ஒரு ஏரிக்குச் சமம்
பத்து ஏரிகள் ஒரு புத்திரனைத் தருவதற்கு சமம்
பத்து புத்திரர்கள் ஒரு மரத்திற்குச் சமம்
பாடல் எண் :6

இந்தப் பூமியில் மரங்களே மனிதனுக்கு
எல்லையில்லா மகிழ்ச்சியை வழங்கும்.ஏனெனில்
அவை நம்மைக் கொடிய வறுமையிலிருந்து காப்பாற்றுகின்றன.
அவ்வாறு காப்பாற்றுவதால் “ த்ரவஹ” (ரட்சகர்) என்று
மரங்களை அழைக்கிறோம்.
ஆகவே, மரங்களை வளர்க்கவேண்டும்.
பாடல் எண் :97

மரங்கள் பூத்துக் காய்க்காவிட்டால்
எள், பார்லி, கொள்ளுடன் உளுந்தும் பாசிப்பயிறும்
கலந்த குளிர் நீரை மண்ணில் இட்டால்
மரங்கள் பூத்துக்குலுங்கிக் கிளைகள் பெருக்கும்.
பாடல் எண் :215

புத்தகத்தின் சிறப்பு சம்ஸ்கிருத சுவடியின் மூலமும் அச்சிடப்பட்டிருப்பது. 323 பாடல்கள் உள்ளது. இது தவிர குணபஜலம், E.M, பஞ்சகாவியம் என பழைய, புதிய நுண்ணுயிர் பெருக்க தொழில் நுட்பங்களும் விவரிக்கப்பட்டுள்ளது. மொத்ததில் விவசாய்களிடம் அவசியம் இருக்கவேண்டிய தொழில் நுட்பங்கள் நிறைந்த நமது பாரம்பரிய விவசாயத்தை விளக்கும் நூல். எழுத்துருவம் பெற்று 1000 ஆண்டுகளுக்குப் பின் தமிழில் கிடைக்கிறது. இயற்கை விவசாயத்திற்கு மாறும் அன்பர்களுக்கு உபயோகமான நூல். இந்த நூலை ஆதரவற்ற குழந்தைகளின் வளர்ச்சிக்கு ஆசிரியர் அர்ப்பணித்துள்ளார்.

கிடைக்குமிடம்.
திரு. ஆர்.எஸ். நாராயணன்
5/47 B சவுந்தரம் நகர் அம்பாத்துரை,
காந்திகிராமம் அஞ்சல்
திண்டுக்கல் 624 302
தொலைபேசி : 95451- 2452365

Saturday, August 29, 2009

“ கல்வி Times ” இரு மொழி மாத இதழ்

இன்று கல்வி வியாபாரமாய் ஆகிவிட்டதால் கிராமத்தில் இருக்கும் மாணவன் திறமையிருந்தும் அதிகம் கஷ்டப்பட வேண்டியுள்ளது. எதனைப் படிப்பது ?, எங்கே படிப்பது ?, எப்படி படிப்பது ? படித்தபின் தனது நிலைமை? என பல கேள்விக்குறிகளுக்கு விடை இந்த “ கல்வி Times ” ஆகும். வாய்ப்புகளை அடையாளம் காண்பிப்பது, உதவும், உதவி தேவைப்படும் உள்ளங்களை இணைப்பது. மாணவர்கள், பெற்றோர், ஆசிரியருக்குத் தேவையான கல்வி தகவல்களை தருவது. பள்ளி, கல்லூரிச் செய்திகள், சுற்றுச்சூழல் பற்றிய கட்டுரைகளையும் தாங்கி வருகிறது. இது போன்ற இதழ்களை நாம் வாங்கிப் படிப்பதோடு மற்றவர்களுக்கும் அறிமுகம் செய்வதால் சிறப்பான சமுதாயத்தை நாம் உருவாக்க முடியும் என்பதில் ஐயமில்லை.

மேலும் விபரங்களுக்கு :
பரமேஸ்வரன் (ஆசிரியர்)
58, மாரியம்மன் கோயில் வீதி
உடையாம் பாளையம்
கோயமுத்தூர் - 641 028.
அலைபேசி : 93676 01079, 98434 22250

Thursday, July 16, 2009

பூவுலகு சுற்றுச்சுழல் இதழ் அறிமுக விழா - கோவை


நாள் :
18 - 07 - 2009 சனிக்கிழமை.
நேரம் :
மாலை 4.30 மணி முதல் 7.30 மணி வரை.
இடம் :
அண்ணாமலை ஓட்டல்,
ஸ்டேட் பாங்க் ரோடு, (கோவை ரயில் நிலையம் அருகில் )
கோயமுத்தூர் - 641 018.

பூவுலகு சுற்றுச்சுழல் இதழை வெளியிடுபவர்.

நீரியல் அறிஞர் முனைவர் இரா.க. சிவனப்பன்

பெற்றுக் கொள்பவர்.

எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன்

சுற்றுச்சுழல் பற்றி நிறைய அறிஞர்கள் விளக்கம் தரவுள்ளனர்.

அனைவரும் இதனை அழைப்பிதழாக ஏற்று வருகை தருமாறு இவ்வலைப்பூ விரும்புகிறது

சந்தா விபரங்கள் அறிய


Tuesday, June 2, 2009

திரு.யாண் ஆர்தஸ் பெர்ட்ராண்ட் அவர்களின் “ஹோம்” (Home)

பிரபல பிரான்சு நாட்டு புகைபட நிபுணர் யாண் ஆர்தஸ் பெர்ட்ராண்ட் அவர்களின் Home என்ற வானிலிருந்து எடுக்கப்பட்ட பூமியின் நிகழ்வுகள் பற்றிய படம் நம்மை பிரமிப்பில் ஆழ்த்தும் என்று எண்ணுகிறேன். பல்வேறு இடங்களில் எடுக்கப்பட்ட இந்த படம் உலக சுற்றுச்சுழல் தினத்தன்று ( 5 ஜுன் 2009 ) முறையாக வெளியிடப்படுகிறது. திரு.அல் கோர் அவர்களின் An Inconvenient Truth படத்திற்கு பின் உலகமெங்கும் மக்களின் மனதில் சுற்றுச்சுழல் பற்றிய விழிப்புணர்வை இப்படம் ஏற்படுத்தி நல்ல மாற்றத்தை இப்பூவுலகிற்கு தரும் என்று நம்புகிறேன்.

திரு.யாண் ஆர்தஸ் பெர்ட்ராண்ட் (United Nations Environment Program(UNEP) Goodwill Ambassador ) தனது சுற்றுச்சுழல் பற்றிய முனைப்பிற்காகவும், பணிக்காகவும் “எர்த் சாம்பியன் ” ( Earth Champion ) என்ற பட்டத்தை பெற்றவர்.

இப்படம் உலகின் எல்லா பகுதிகளிலும் திரையிடப்பட்டு சுற்றுச்சுழல் பற்றிய திருப்புமுனை படமாக வரலாற்றில் இடம் பெற இவ்வலைப் பூ வாழ்த்துகிறது.

Wednesday, April 15, 2009

பயிர்களைத் தாக்கும் பூச்சிகளும் பீடைகளும் - நூல்

அதிக இரசாயன பூச்சி கொல்லிகளை பயன்படுத்தியதால் இயற்கை சமன்பாட்டில் மாற்றம் ஏற்பட்டு நன்மை செய்யும் பூச்சிகளின் எண்ணிக்கை குறைந்து தீமை செய்யும் பூச்சிகள் வலுப் பெற்றதன் விளைவுகளை விவசாய தற்கொலைகள் விபரமாக அறிவிக்கின்றன. ஆனால் எந்தெந்த பூச்சிகள் எந்தெந்த பயிர்களை தாக்குகின்றன , கட்டுபடுத்தும் முறைகள் பற்றி புத்தகம் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்குமென்று தோன்றும். இத்தேடலில் இருந்த போது இத்துறை சாரந்த பேராசிரியர் ஒருவர் எனக்கு பயிர்களைத் தாக்கும் பூச்சிகளும் பீடைகளும் (ஆசிரியர் ஹெச். லிவின் தேவசகாயம்) என்ற நூலை பரிந்துரைத்தார். படித்து பார்த்த பின் ஆசிரியரின் உழைப்பு, அனுபவம், மிக நேர்த்தியாக வரையப்பட்ட பூச்சியினங்களின் படங்கள் நமக்கு பூச்சியினங்கள் பற்றிய தெளிவைத் தருகிறது. இந்நூல் 4 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது
பகுதி -1: பூச்சிகளின் புறத் தன்மைகள், உள் உறப்புகள், உணவு, கழிவு, சுவாச, இனப்பெருக்க மண்டலங்கள் பற்றியும், பொருளாதார சேதம், கட்டுப்பாடு பற்றி விவரித்துள்ளார்.

பகுதி -2 : தானியப் பயிர்கள், எண்ணெய்வித்துப் பயிர்கள், காய்கறிப் பயிர்கள், பணப் பயிர்கள், கடுகு வகைப் பயிர்கள், கிழங்கு மற்றும் பூண்டு வகைப் பயிர்கள், தோட்டப் பயிர்கள், பசுந்தாள் உரப் பயிர்கள், பூசணிவகைச் செடிகள், பழச் செடிகள், அலங்காரச் செடிகள், மரங்கள் மற்றும் சேமிப்பு தானியங்களை தாக்கும் பூச்சினங்கள் என வகைப்படுத்தி அதனையும் கட்டுப்படுத்த உழவியல், மருந்து மற்றம் உயிரியல் முறைகளையும் விவரித்துள்ளார்.

பகுதி - 3 : பயிர் சிலந்திகள், எலிகள், பறவைகள், நூற்புழுக்கள், நண்டுகள், நத்தைகள் மற்றும் விலங்கினங்கள் பற்றி விவரித்துள்ளார்.

பகுதி - 4 : பூச்சிகளைச் சேகரித்து, நிலைப்படுத்திப் பாதுகாத்தல் பற்றி விவரித்துள்ளார்.


ஒவ்வொரு விவசாயக் குடும்பத்திலும் இருக்கவேண்டிய பயனுள்ள நூல்.
விலை : ரூ.235/=

கிடைக்குமிடம் :
M/s. ZION PRINTERS & PUBLISHERS,
91, ARUNACHALAM STREET,
CHINTADRIPET,
CHENNAI -600 002.

PHONE : 044- 28453655, 28453764.
email : zpp@vsnl.com

Tuesday, April 7, 2009

நம்வழி வேளாண்மை - காலாண்டு இதழ்.

இன்றைய உலகமயத்தில் பத்திரிகைகள் எந்த துறை சார்ந்ததாக இருந்தாலும் வணிக நோக்கில்தான் தங்கள் சிந்தனைகளையும், செயல்பாடுகளையும் வெளிப்படுத்துகின்றன. ஆனால் நம்வழி வேளாண்மை இதற்கு விதிவிலக்கு. எந்தவித விளம்பரமும் இல்லாமல் இயற்கைவிவசாய உத்திகள், அனுபவ மூலிகைவைத்தியம், அடிமட்ட மக்களின் கண்டுபிடிப்புக்கள், பொக்கிஷமான பாரம்பரிய அறிவு, பிராந்திய விதைகள் மற்றும் தாவர வகைகள் என எல்லா பக்கங்களிலும் உபயோகமான செய்திகளை மாத்திரமே தாங்கி வருகின்றது. அவசியம் வாங்க வேண்டிய காலாண்டு இதழ்.

விவசாயிகள் / தனிநபர் வருட சந்தா ரூ.100/= ஆயுள் சந்தா ரூ.1000/=
ஆசிரியர் : பெ. விவேகானந்தன்
நம்வழி வேளாண்மை,
45,டி.பி.எம். நகர்,
விராட்டிபத்து,
மதுரை 625 010.
தொலைபேசி : 0452-2380082; 2380943
Email : vivekseva@dataone.in
================================
இதன் தொடர்பு ஆங்கில இதழ் : Honey bee
Prof. Anil Gupta,
Honey Bee,
Indian Institute of Management,
Vastrapur,
Ahmedabad-380 015
Email: honeybee@sristi.org

Monday, February 16, 2009

தமிழ்நாட்டுப் பாம்புகள்

பாம்புகளின் எண்ணிக்கை மிக மிக குறைந்து இன்று பூங்காக்களில் காட்சி உயிராக இருக்கும் அளவிற்கு மோசமான நிலைக்கு வந்து விட்டது. “பாம்பை கண்டால் படையும் நடுங்கும்” என்பது பழமொழி.. ஆனால் பல்வேறு காரணங்களால் இதன் எண்ணிக்கை குறைந்துவிட்டது. இதனால் எலிகளின் எண்ணிக்கையும் தொல்லையும் அதிகரித்துவிட்டது(வடகிழக்கு மாநிலங்களில் மூங்கில் பூக்கிறதென்றால் அம்மாநில அரசுகள் இந்த எலிகளைக் கண்டு பயப்படுகின்றனர் காரணம் அது செய்யும் உணவு நாசம்.) அது மாத்திரமன்று கொடிய தொற்று நோய்களை பரப்புவதும் இந்த எலிகளே. எலிகளின் இயற்கை எதிரி பாம்புதான். ஆனால் நாம் பாம்பை கொல்வதிலேயே கவனம் செலுத்துகிறோம். ஆனால் பிச்சாண்டிகுளம் பையோரிசோர்ஸ் சென்டர் “தமிழ்நாட்டுப் பாம்புகள்” என்னும் ஒரு ஆவணத்தை படங்களுடன் வெளியிட்டிருக்கிறார்கள். அதன் வகைகள், உடலமைப்பு, உணவு, வாழ்விடம், இனப்பெருக்க முறை,ஒவ்வொன்றின் விஷத்தன்மை என்று மிக சுருக்கமாக ஆனால் தெளிவாக வெளியிட்டிருக்கிறார்கள். இயற்கை சங்கிலியில் பாம்பும் ஒரு அம்சமே.

இதன் விற்பனை தொகை இயற்கை கல்விக்கும், தென்இந்தியாவில் வெப்பமண்டல காடுகளின் ஆராய்ச்சிக்கும் அபிவிருத்திக்கும் உதவுகிறது. எனவே இந்த ஆவணத்தை வாங்குவதன் மூலம் நாம் இயற்கையின் ஒரு படைப்பை அறிந்து கொள்ளுகிறோம் கூடவே கல்வி, ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக்கும் உதவுகிறோம். பள்ளி, கல்லூரி, விவசாயிகள் மற்றும் இயற்கை ஆர்வலர்களிடம் அவசியம் இருக்கவேண்டிய ஒரு பயனுள்ள தொகுப்பு.

மேலும் தகவல் மற்றும் ஆவணத்தைப் பெற:

PITCHANDIKULAM BIORESOURCE CENTRE,
AUROVILLE - 605 101.
Email : tdef@auroville.org.in

மற்றும்

ECO GREEN UNIT
No 44, DIVINE,
Lakshmi Nagar,
Ganapathi (po),
Coimbatore. 641 006
9442416767, 9443582598

Wednesday, January 14, 2009

தேனீ வளர்ப்பு நுட்பங்கள்- நூல்

மனிதன் தன் அறிவினாலும் ஆராய்ச்சியினாலும் மிக அதிக மகசூல் தரும் புதிய இரகங்களை கண்டுபிடித்தாலும் இயற்கையாக தேனீக்கள் செய்யும் மகசூல் அதிகரிப்பை தவிர்க்கக் கூடாது. தேனீ வளர்ப்பது என்பது ஒரு கல்லில் இரு மாங்காய் ஆகும். விவசாயத்திற்கு குறிப்பாக இயற்கை விவசாயத்திற்கு சாலப் பொருந்தும். ஒன்று மகசூல் கூடுகிறது மற்றொன்று தேன், மெழுகு, அரசக்கூழ் (Royal Jelly) போன்றவற்றால் கூடுதல் வருமானம்.
1991-92 ஆண்டுகளில் முதலிடத்திலிருந்த தமிழகம் அவ்விடத்தை இழந்துவிட்டது. மீண்டும் அவ்விடத்தை அடைய முயற்சிக்க வேண்டும். தேனீ வளர்ப்பை துவங்க விருப்பமுள்ளவர்களுக்கு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் பூச்சியியல் துறை பேராசிரியர் மெ. முத்துராமன் அவர்களின் “தேனீ வளர்ப்பு நுட்பங்கள்” என்ற நூல் மிக பயனுள்ளதாக இருக்கும். தெளிவான வண்ணபடங்களுடன் வளர்ப்பு, பராமரிப்பு நுட்பங்கள், உணவு ஊட்டுதல், நோய்கள் என அனைத்து தகவல்களையும் விரிவாக தந்திருப்பது நூலின் சிறப்பு. ரூ.100/= விலையுள்ள இந்நூல் கீழ்கண்ட முகவரியில் கிடைக்கும்.

வேளாண் பூச்சியியல் துறை,
பயிர் பாதுகாப்பு மையம்
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம்
கோயமுத்தூர் - 641 003.

Thursday, December 18, 2008

“Birds of Tamilnadu” - முனைவர்.K.ரத்னம் அவர்களின் பயன்மிக்க நூல்.

இயற்கையைப் பராமரிப்பதில் பறவைகளின் பங்கு குறிப்பிடத்தக்கது. விதைகளை எல்லா இடங்களுக்கும் பரப்பி வனத்தை விரிவுபடுத்துவதிலும் , பூச்சியினங்களை கட்டுப்படுத்துவதிலும், சுற்றுசுழல் மாசுபடாமல் சுத்தம் செய்வதிலும் பறவைகளுக்கு நிகர் பறவைகள்தான்.பறவைகளின், மிருகங்களின் உணவுப்பாதையில் சென்றுவரும் விதைகள் அதிக முளைப்புத் திறன் பெற்றவை என்பது நாம் அறிந்ததே. விவசாயத்திலும் இதற்கு நல்ல பங்கு உண்டு. ஆயிரக்கணக்கான பறவைகள் இருந்தாலும் நாம் விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில்தான் பறவைகளைப் அறிந்திருக்கிறோம். புதிதாக சில பறவைகளைப் பார்த்தாலும் நம்மால் இனம் காண முடிவதில்லை. அக்குறையை போக்க வந்துள்ள நூல்தான் முனைவர்.K.ரத்னம் அவர்களின் “ Birds of Tamilnadu” .
தமிழகத்தின் சுமார் 328 பறவைகளின் அங்க அடையாளங்கள், காணப்படும் இடங்கள், வாழ்வுமுறை, உணவு, குரல், இனப்பெருக்கம் என மிகத்தெளிவாக வண்ணப் படங்களுடன் விளக்கியிருப்பது இந்நூலின் சிறப்பு. ஆங்கிலம், தமிழ் கூடவே அறிவியல் பெயரும் இருப்பது பின்னாட்களில் குழந்தைகளுக்கு மிக உபயோகமாக இருக்கும். முனைவர்.K.ரத்னம் அவர்கள் தமிழ்துறைத் தலைவராக மன்னர் சரபோஜி கலைக்கல்லூரி, தஞ்சாவூரில் பணியாற்றிவிட்டு ஓய்வு பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிறந்தநாள், சாதனைக்குப் பரிசு என குழந்தைகளுக்கு விலைமிக்க கம்யூட்டர் விளையாட்டுப் பொருட்கள், ஆடைகள், அணிகலன்கள் என பரிசளிக்கிறோம். ஒரு மாறுதலுக்காக இது போன்ற வாழ்கைக்குப் பயன்தரும் நூல்களை பரிசாக அளித்தால் இயற்கையை புரிந்துகொள்ள குழந்தைகளுக்கு ஒரு வாய்ப்பாக இருக்குமே. விவசாய்களிடமும் இருக்க வேண்டிய நூல்.

கிடைக்குமிடம்:
மாணிக்கவாசகர் நூலகம்
சிதம்பரம்................230069
சென்னை................25361039, 24357832
மதுரை....................2622853
கோவை..................2397155
திருச்சி....................2706450