Saturday, April 26, 2014

நெற்பவளம் என்னும் யோபுவின் கண்ணீர்


நெற்பவளச் செடி

ஜெபமாலையும் இயற்கையான துவாரமும்
நெற்பவளம்
பண்டைய உலகத்தில் இயற்கை சார்ந்த பொருட்கள் அணிகலன்களாகவும் ஆபரணங்களாகவும்  பயன்படுத்தபட்டுள்ளது. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே நெற்பவளம் என்னும் தானியம் உணவாகவும் ஆபரணமாகவும் பயன்படுத்தபட்டுள்ளது நாகரீகம் வளர ஆபரணங்கள் உலோகத்திற்கு மாறிய பின் “தங்கம்” இன்று அரசாட்சி செய்கிறது. தங்கத்தின் விலையும் உயர உயர நெற்பவளம்  மீண்டும் புத்துயிர் பெற ஆரம்பித்துள்ளது. ஆன்மீகத்தில் இதன் பங்கு கணிசமாகவுள்ளது. இதன் ஆங்கிலப் பெயரான "யோபுவின் கண்ணீர்"  (Job’s Tear ) என்பது கூட பைபிளில் யோபு என்ற செல்வந்தர் இறைபக்தியின் காரணமாக எல்லாவற்றையும் இழந்தபின் கூட பக்தியுடன் இருந்ததால் அவர் அதிகம் கண்ணீர் விட வேண்டியிருந்தது. அவரை கனப்படுத்தும் முகமாக “யோபுவின் கண்ணீர்” என்றழைக்கின்றனர்.  இன்றும் கத்தோலிக்க கிறிஸ்துவர்கள் ஜெபமாலையாக நெற்பவளத்தையே உபயோகிக்கின்றனர். காலபோக்கில் நெற்பவளம் கிடைப்பது அரிதானதால் பிளாஸ்டிக் மணிகள் அந்த இடத்தை நிரப்பியுள்ளது.

பலவித ஆபரணங்கள்

“அன்னை தெரசா” அவர்கள் நெற்பவிள ஜெபமாலையுடன்.

நெற்பவிள காதணீ.


புல் வகை குடும்பத்தை சார்ந்த இப்பயிர் வெப்பமண்டலத்தைச் சார்ந்த கிழக்காசிய நாடுகளை தாயகமாகமாகக் கொண்டது. ஆண்டுப் பயிரான இதற்கு குறைந்த பட்ச நீர் போதுமானது. நன்கு நீர் கிடைக்கும் இடங்களில் 6 அடி உயரம் வளர்ந்து நிறைய மணிகளைத் தரும் .வடமாநிலங்களில் “வைஜயந்தி” என்று அழைக்கின்றனர். மருத்துவ குணம் கொண்ட இதனை தானியமாகவும் உட்கொள்ளலாம் அதை சமயம் கடினமான, பளபளக்கும், நடுவில் துவாரமுள்ள இம்மணியை கோர்த்து ஆபரணமாக அணிய உடல் ஆரோக்கியம் பெறும். மாலையாகவும் வளையல், காதணி என்று பல்வேறு அணிகலன்கள் செய்யப்படுகின்றன. “அன்னை தெரசா”அவர்கள் நெற்பவளத்தால் செய்யப்பட்ட ஜெபமாலையை உபயோகித்தார்கள் என்பது கூடுதல் தகவல். இந்து சமயத்திலும் இதனை மாலையாக அணிகிறார்கள். பௌத்த, முஸ்லிம் சமயங்களிலும் இதற்கு சிறப்பான இடமுண்டு. பெண்கள் சுய உதவிக்குழுகள் வீட்டுத்தோட்டதில் வளர்த்து வியாபார ரீதியாக இதனை ஏற்றுமதி கூட செய்ய வாய்புள்ளது.


Sunday, March 30, 2014

குடும்ப மகிழ்ச்சி


சிறுகுடும்ப தபால் வில்லைகள்

குடும்ப மகிழ்ச்சியென்பது நாம் உண்ணும் உணவில்தான்  உள்ளது. குறிப்பாக இயற்கை இடுபொருட்கள் மூலம் உற்பத்தி செய்யும் உணவுக் பொருட்கள் சுவை தருவதோடு நல்ல ஆரோக்கியத்தையும் தருகிறது என்றால் மிகையில்லை. அறுபது மற்றும் எழுபதுகளில் எல்லா ஊடகங்களிலும் சிறுகுடும்பம், குடும்பக் கட்டுப்பாடுகள் பற்றி அதிக அளவில் விளம்பரங்கள், சாதனங்கள் பற்றிய அறிமுகங்கள் இருந்தன. சிறு குடும்ப தபால் தலைகள் 70-90 களில் வெளிவந்தன. அப்போது இந்திய தம்பதிகளிடையே கருத்தரிக்கும் திறன் நன்கு இருந்ததுஆனால் 2000 ஆம் ஆண்டுகளில் நிலைமை மாறி கருத்தரிப்பு நிலையங்கள் சிறு நகரங்களில் கூட தோன்ற ஆரம்பித்தன.


 இன்று  குழந்தை தத்தெடுத்தல் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். பிறக்கின்ற குழந்தைகளில் குறிப்பிட்ட சதவீதம் ஆட்டிசம் (autism), கற்றல் குறைபாடு (Learning Disability), மனவளர்ச்சி குன்றுதல்  போன்றவை குடும்ப மகிழ்ச்சியை வெகுவாக பாதித்துள்ளது. 60  களில் அறிமுகப்படுத்தப்பட்ட இரசாயன விவசாயம், மாசடைந்த நிலத்தடி நீர்,  உணவு முறையில் மாற்றம் காரணமென்று பெரும்பான்மை மக்கள் கருதுகின்றனர். பாரம்பரிய தானியங்கள், உள்ளூர் இரக விதைகள், வீட்டுத் தோட்டம், விலை சற்று அதிகமிருந்தாலும் இயற்கை அங்காடிகளுக்கு ஆதரவு, யோகப் பயிற்சி போன்ற செயல்கள்  முக்கிய குடும்ப மகிழ்ச்சியை (குழந்தை பேறு) தரும்.

பெரியவர்களுக்கு நோயற்ற ஆரோக்கிய நிலைமையைத் தரும். பெரியவர்கள் ஆரோக்கியமாக இருந்தாலே மருத்துவமனை செல்லுதல் குறைவதால் குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும்.  இதனால் சில சமூக அவலங்கள் (மறுமணம், ஏச்சுப்பேச்சுக்கள், முதியோர் இல்லம், மனநல காப்பகங்கள் ) குறைய வாய்ப்புள்ளது.

Wednesday, January 15, 2014

கோவையில் “வீட்டிலும் செய்யலாம் விவசாயம்”- பயிற்சிக் கருத்தரங்கு.



 முன்பதிவிற்கு :

 தொலைபேசி அல்லது செல்போன் மூலம் 044-66802977 என்ற எண்ணை அழைத்து, குரல் வழிகாட்டுதல்படி பதிவு செய்யவும்.மேலும் விபரங்களுக்கு 99406-51071 (காலை 10 மணி முதல் 6 மணி வரை)