விவசாயக் கண்காட்சியோடு சேர்ந்து இருந்த கால்நடை கண்காட்சி காலத்தின் அருமை, மக்களின்
தேவையை கருத்தில் கொண்டு தனியாக கால்நடை
மற்றும் மீன் வளர்ப்புக்கென்றே தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்
கோவையில் இந்த தொழில்நுட்ப கண்காட்சி நடத்துகிறது. மாறி வரும் வணிகம், வளர்ப்பு
முறை, தீவனம், இனம், நோய்தடுப்பு, வேலை வாய்ப்பு, கருத்தரங்கம், கலந்துரையாடல்கள் என்று பயனுள்ள பல்வேறு அம்சங்கள் இருக்குமென்பதில் இருவேறு கருத்துகள் இருக்கமுடியாது. பயன்படுத்தி
மேன்மையடைவது நம் கையில்தான் உள்ளது.
Thursday, December 27, 2012
Sunday, December 9, 2012
கரும்பு இனப்பெருக்கு நிலையம் நடத்தும் நூற்றாண்டு விழா புகைப்படப் போட்டி
இவ்வருடம் நூற்றாண்டு காணும் கோவை கரும்பு இனப்பெருக்கு நிலையம் , அகில இந்திய அளவிலான புகைப்படப் போட்டியினை நடத்த உள்ளது . இந்தியாவில் வாழும் 18 வயதிற்கு மேற்பட்ட இந்திய குடிமகன்கள் இப்போட்டியில் கலந்து கொள்ளலாம் . அனுமதி இலவசம். 'கரும்பு' என்னும் தலைப்பில் sbiphotocontest@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு படங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி 15-12-12 இந்திய நேரம் நண்பகல் 12 மணியாகும்.
நுழைவுப் படிவம் மற்றும் போட்டி விதிமுறைகளை http://www.sugarcane100. blogspot.in
, www.sugarcane.res.in மற்றும் www.caneinfo.nic.in என்னும் தளங்களில் காணலாம்.
கலந்து கொண்டு வெற்றி பெற வாழ்த்துகள்!!!!

Monday, October 22, 2012
கைபிடி சுவற்றில் கீரை வளர்ப்பு. (Growing greens on parapet Wall).
இடப் பற்றாக் குறையும், குறைவான சூரிய ஒளியும் இன்றைய பெருநகர மக்களின்
வீட்டுத்தோட்ட ஆசையை குறைக்கும் காரணிகள், கூடவே தண்ணீர் பற்றாக்குறையும் சேர்ந்து பயப்படுத்தும். ஆனால் மாடி கைபிடி சுவர் பயனின்றி இருக்கும் அதனை
உபயோகித்து கீரையை வளர்க்க முடியுமா? என்று முயன்றதில் முடியும் என்று
தோன்றுகிறது. வளர்க்கும் பை முழுவதும் (செடி இருக்கும் இடம் தவிர)
மூடப்பட்டிருப்பதால் நீர் ஆவியாதலை வெகுவாக தவிர்த்து குறைந்த நீரில் களைகளின்றி வளர்க்க முடியும். அதன் படங்கள் உங்கள்
பார்வைக்கு
Subscribe to:
Posts (Atom)






