மாடியில் கீரை வளர்ப்பு பற்றி ஏற்கனவே பதிவு ஒன்றை எழுதியிருக்கிறேன். இருப்பினும் இரண்டாம் முறை செய்த போது இடுபொருள் முதல் அறுவடை வரை ஆவணப்படுத்தினேன். தென்னை மட்டை, உலர்ந்த சிறிய வேப்பமர துண்டுகள் என எளிதாக கிடைக்கும் பொருட்களே உபயோகப்படுத்தப்பட்டது. மண்புழு படுகையாகவும் உபயோகமாகிறது.
பொழுது போக்கிற்காக இன்றி பார்த்த பின் ஆர்வலர்களுக்கும் உபயோகமாக இருக்கும் என்று எண்ணுகிறேன். 23 நாட்களில் முதல் அறுவடை. சுத்தமான சத்தான கீரை சமையலுக்கு தயார். வரும் ஒரிரு மாதங்களுக்கு “நிலைய வித்துவானாக” உதவி புரியும். முயற்சி செய்யுங்கள் ஆரோக்கிய உணவை சுவைக்கலாம்.
பழைய பதிவைக் காண :
http://maravalam.blogspot.com/2010/05/blog-post.html
Monday, August 23, 2010
Thursday, August 19, 2010
மரச்சாகுபடி மற்றும் தரிசு நில மேம்பாடு - ஒரு நாள் விழிப்புணர்வு இலவசக் கருத்தரங்கம்
பண்ணாரி அம்மன் தொழில் நுட்ப கல்லூரி (சத்தியமங்கலம் ) பயோடெக்னாலஜி துறை
மற்றும்
சேசாயி காகித ஆலை ஈரோடு
இனைந்து நடுத்தும் ஒரு நாள் விழிப்புணர்வு கருத்தரங்கம் . மரசாகுபடியின் முக்கியத்துவம், பண்ணைக் காடுகள் , தரிசுநிலத்தில் சவுக்கு சாகுபடி வெற்றிக் கதை, மரச் சாகுபடிக்கு வங்கிக் கடன்கள் போன்ற முக்கிய தலைப்புக்களில் வல்லுனர்கள் பேசவுள்ளனர். விவசாய பெருங்குடிமக்கள், சுய உதவிக் குழுக்கள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு மிக உபயோகமாக இருக்கும்.
தலைப்பு : மர சாகுபடி மற்றும் தரிசுநில மேம்பாடு
இடம் : டெக்ஸ்டைல் செமினார் ஹால், பண்ணாரி அம்மன் தொழில் நுட்ப கல்லூரி (சத்தியமங்கலம் )
நாள் : 20-08-2010
நேரம் : காலை 9.30 மணி முதல் மாலை 4.00 மணி வரை.
அனுமதி : இலவசம்.
முன்பதிவிற்கு :
முனைவர். N.S. வசந்தி
பேராசிரியர் மற்றும் தலைவர்
பயோடெக்னாலஜி துறை
பண்ணாரி அம்மன் தொழில் நுட்ப கல்லூரி
சத்தியமங்கலம்.- 638 401
தொலைபேசி :04295-221289 Extn 580
அலைபேசி : 94437 74447, 97506 21289
முனைவர். G.S. முருகேசன்
உதவிப் பேராசிரியர்
பயோடெக்னாலஜி துறை
பண்ணாரி அம்மன் தொழில் நுட்ப கல்லூரி
சத்தியமங்கலம்.- 638 401
தொலைபேசி :04295-221289 Extn 580
அலைபேசி : 97151 18120
திரு. சண்முகம்
தலைவர் (சுற்றுச் சுழல் )
சேசாயி காகித ஆலை
ஈரோடு
அலைபேசி : 94433 40236
ஓர் வேண்டுகோள் : உங்களுக்கு தெரிந்தவர்களுடன் இச் செய்தியை பகிர்ந்து கொள்ளுங்கள்.
மற்றும்
சேசாயி காகித ஆலை ஈரோடு
இனைந்து நடுத்தும் ஒரு நாள் விழிப்புணர்வு கருத்தரங்கம் . மரசாகுபடியின் முக்கியத்துவம், பண்ணைக் காடுகள் , தரிசுநிலத்தில் சவுக்கு சாகுபடி வெற்றிக் கதை, மரச் சாகுபடிக்கு வங்கிக் கடன்கள் போன்ற முக்கிய தலைப்புக்களில் வல்லுனர்கள் பேசவுள்ளனர். விவசாய பெருங்குடிமக்கள், சுய உதவிக் குழுக்கள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு மிக உபயோகமாக இருக்கும்.
தலைப்பு : மர சாகுபடி மற்றும் தரிசுநில மேம்பாடு
இடம் : டெக்ஸ்டைல் செமினார் ஹால், பண்ணாரி அம்மன் தொழில் நுட்ப கல்லூரி (சத்தியமங்கலம் )
நாள் : 20-08-2010
நேரம் : காலை 9.30 மணி முதல் மாலை 4.00 மணி வரை.
அனுமதி : இலவசம்.
முன்பதிவிற்கு :
முனைவர். N.S. வசந்தி
பேராசிரியர் மற்றும் தலைவர்
பயோடெக்னாலஜி துறை
பண்ணாரி அம்மன் தொழில் நுட்ப கல்லூரி
சத்தியமங்கலம்.- 638 401
தொலைபேசி :04295-221289 Extn 580
அலைபேசி : 94437 74447, 97506 21289
முனைவர். G.S. முருகேசன்
உதவிப் பேராசிரியர்
பயோடெக்னாலஜி துறை
பண்ணாரி அம்மன் தொழில் நுட்ப கல்லூரி
சத்தியமங்கலம்.- 638 401
தொலைபேசி :04295-221289 Extn 580
அலைபேசி : 97151 18120
திரு. சண்முகம்
தலைவர் (சுற்றுச் சுழல் )
சேசாயி காகித ஆலை
ஈரோடு
அலைபேசி : 94433 40236
ஓர் வேண்டுகோள் : உங்களுக்கு தெரிந்தவர்களுடன் இச் செய்தியை பகிர்ந்து கொள்ளுங்கள்.
Monday, August 16, 2010
தொட்டிகளில் எளிதாக செடிகள் வளர்க்க சில யுக்திகள்.
நகரவாழ்கையில் அதிக செலவின்றி அதேசமயம் தேவையற்ற சில பொருட்களைக் கொண்டு சிறப்பாக தொட்டிகளில் செடிகளை வளர்க்க இயலும். உரித்த தென்னை மட்டைகளை எவ்வாறு அகற்றுறுவது என்றாகிவிடும். அதேபோன்று பயணம் முடிந்து வரும் போது குடிநீர் “பெட்” பாட்டில்களை தூக்கி எறிந்து மாசுபாட்டை உண்டாக்கிவிட்டு வருவோம். இந்த இரு பொருட்களையும் படங்களில் காட்டியவாறு தொட்டிகளில் செடி வளர்க்க உபயோகிக்கலாம். வேர் பகுதிக்கே நீர் செல்வதால் மிகக் குறைந்த அளவு நீர் ஊற்றினாலே போதும். மெதுவாக வெறியேறும் நீரை தென்னை மட்டைகள் உறிஞ்சி வைத்துக் கொள்ளும். மண் சிதறுதல், நீர் தேங்கி வேர் அழுகுதல் போன்றவை இல்லை. வாரத்திற்கு ஒரு நாள் ஊற்றினாலே போதும்.
![]() |
| மட்டையை நிரப்புங்கள் |
![]() |
| மூடியில் துவாரம் செய்யுங்கள் |
![]() |
| மூடியை கீழாக மட்டையின் அருகில் வையுங்கள் |
![]() |
| மண் இட்டு நிரப்புங்கள் |
![]() |
| செடியை நடுங்கள் |
![]() |
| நீரை ஊற்றுங்கள். |
Labels:
நீர் மேலாண்மை,
வீட்டுத்தோட்டம்
Subscribe to:
Posts (Atom)







