Thursday, November 24, 2011

வெட்டிவேர் உதவியுடன் சரிவுகளில் மழைநீர் சேமிப்பு

முன்னாள் தலைவர் முனைவர். டேல் ராக்மிலர் உடன்

5-வது  உலக வெட்டிவேர் மாநாட்டின் (ICV-5) முடிவுகளை தொகுத்து சிறப்பு  விருந்தினர்கள் வழங்கினார்கள். அதில் முனைவர். இலட்சுமண பெருமாள்சாமி அவர்கள் இருந்தது மகிழ்ச்சியைளித்தது. உலக வெட்டிவேர் அமைப்பின் முன்னாள் தலைவர் முனைவர். டேல் ராக்மிலர் பேசும் போது வெட்டிவேர் மூலம் நிலத்தடிநீர் உயர்த்தவேண்டுமென கேட்டுக் கொண்டு என் அருகில் வந்து அமர்ந்தார். மெதுவாக எனது 2 நிமிட படம் பற்றி கூறினேன். திரையிட்ட பின் பாராட்டியதோடு மாநாடு முடிந்தவுடன் காங்கோ நாட்டிற்கு செல்வதாகவும் அங்குள்ள பள்ளி குழந்தைகளுக்கு மொழிமாற்றம் செய்து காண்பிப்பதாகவும் கூறினார். படத்தை உருவாக்கும் போது பள்ளிக் குழந்தைகளையும், நமது மலைப்பகுதிகளையும், ஆப்பிரிக்காவின் சஹாரா பகுதிகளையும் எண்ணி உருவாக்கினேன் அது நிறைவேறுவது குறித்து மிக்க மகிழ்ச்சியடைகிறேன். மாநாட்டிற்கு ஆங்கிலத்தில் பதிவு செய்தேன். நமக்காக தமிழ் வாசகங்களுடன் உங்கள் பார்வைக்கு.

6 comments:

  1. வாழ்த்துக்கள் அய்யா

    ReplyDelete
  2. உங்கள் வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  3. congratulations. I hope our own state governments will take note of your efforts.

    ReplyDelete
  4. திருமதி.வெற்றிமகள். உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  5. அழைப்பிதழ்:

    உங்களது வலைப்பூவை இன்றைய வலைச்சரத்தில் தொடுத்திருக்கிறேன்.

    தாழம்பூ - இயற்கைச் சரம்

    http://blogintamil.blogspot.in/2012/04/blog-post_05.html

    வருகை தந்து தாழம்பூவின் மணத்தை நுகர அழைக்கிறேன்....

    நட்புடன்

    வெங்கட்.

    ReplyDelete
  6. திரு.வெங்கட் நாகராஜ்

    தாங்கள் தாழம்பூ - இயற்கைச் சரத்தில் வெட்டிவேரை தொடுத்ததிற்கு மிக்க நன்றி.உங்கள் பூசரங்களை நேர்த்தியாக தொடுத்துள்ளீர்கள். வாழ்த்துகள்

    ReplyDelete