இயற்கையை எவ்வளவு கொடூரமாக அழிக்கமுடியுமோ அந்த அளவிற்கு அழித்து விட்டோம். மலைகள் மரங்களுடன் இருந்தால்தான் மனிதன் அமைதியாக வாழமுடியும் இதில் குறைவு ஏற்படும் போது மனிதனுக்கும் மிருகங்களுக்குமிடையே (குறிப்பாக மனிதன் யானை) பிரச்சனைகள் உண்டாகின்றன. இதில் அதிகமாக யானைகளும், அரியவகை தாவரங்களும் அழிந்து போவதுதான் வருத்ததிற்குரியது. மலைகள் மரங்களுடன் இருந்தால் மழை நிச்சயம் உண்டு. உணவும் நீரும் இருந்தால் மனித மிருக பிரச்சனைகள் குறையும். மரங்கள் இயற்கையாக தன்னைத் தானே எவ்வளவு எளிதாக புதிப்பித்து கொள்ளுகிறது என்பதை தனக்கே உரிய அனிமேஷன் படம் மூலம் நமக்கு தெளிவுபடுத்துகிறார் திரு. ப்ராசிட்பொன்.
நமது ஆயிரக்கணக்கான ஏக்கர் மழைக்காடுகளை தேயிலை மற்றும் காப்பித் தோட்டங்களாக மாற்றிவிட்டோம். குறைந்த பட்சம் இருக்கின்ற மலைப் பகுதிகளிலாவது மரங்களை வளர்ப்போம்.
மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
காடும் உடைய தரண். குறள் : 742.
No comments:
Post a Comment