Tuesday, October 27, 2009

தமிழ்நாடு அரசு அங்ககச் சான்றளிப்புத்துறையின் கட்டண விபரங்கள்

தமிழ்நாடு அரசு அங்ககச் சான்றளிப்புத்துறையின் கட்டண விபரங்கள் பின்வருமாறு.

Source : தமிழ்நாடு அங்ககச் சான்றளிப்புத்துறையின் கையேடு.

Monday, October 26, 2009

தமிழ்நாடு அரசு அங்ககச் சான்றளிப்புத்துறைக்கு “அபிடா” அங்கீகாரம்

தமிழ்நாடு அரசால் மே 2007 ம் வருடத்தில் நிறுவப்பட்ட அங்ககச் சான்றளிப்புத்துறைக்கு மத்திய அரசு “அபிடா” நிறுவனத்தால் மதிப்பேற்றல் வழங்கப்பட்டுள்ளது. இந்த மதிப்பேற்றல் தேசிய அங்கக உற்பத்தித் திட்டத்தின்படி வழங்கப்பட்டு, மதிப்பேற்றல் எண் NPOP/NAB/0019 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது..இதன்படி தமிழ்நாடு அரசு அங்ககச் சான்றளிப்புத் துறையின் கீழ் பதிவு செய்யப்படும் அங்ககப்பண்ணைகளை (Organic Farms )தேசிய அங்கக உற்பத்தித் திட்டத்தின்படி ஆய்வு செய்து உரிய சான்றுகள் வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இத்துறைக்கு வழங்கப்பட்ட மதிப்பேற்றல் ஐரோப்பா கமிஷன், சுவிட்சர்லாந்து மற்றும் அமெரிக்காவின் வேளாண்மைத்துறையின் மதிப்பேற்றல் வழங்கும் நடைமுறைக்கு இணையாகும்.

தமிழ்நாடு அரசு அங்ககச் சான்றளிப்புத் துறையால் வழங்கப்படும் சான்றுகள் இந்தியாவிலிருந்து அங்ககப் பொருட்கள் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய பயன் உள்ளதாக இருக்கும். தமிழகம் முழுவதும் அங்கக பயிர் உற்பத்தி, கால்நடை பராமரிப்பு, உணவு பதப்படுத்துதல், அங்கக இடுபொருள் உற்பத்தி, வணிகம் மற்றும் ஏற்றுமதி குறித்த ஆய்வுகள் மேற்கொண்டு சான்று வழங்க உரிய நடைமுறைகள் மற்றும் தரங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அங்கக முறையில் வேளாண்மை மேற்கொள்ளும் விவசாய்கள், விவசாயக்குழுக்கள் மற்றும்வணிக நிறுவனங்கள் தங்களுடைய அங்ககப்பண்ணைகளை கீழ்கண்ட முகவரியில் பதிவு செய்து பயன் பெறலாம். வாழ்க வளமுடன், வாழ்க வையகம்.

இதன் முக்கிய அம்சம் சிறு/குறு விவசாயிகள் கூட பல ஆயிரங்களை செலவு செய்யாமல் சில நூறு ரூபாய்களில் அங்ககச் சான்றிதழ் மற்ற நாடுகளுக்கு இணையானதை பெறலாம் என்பதுதான். இது பற்றிய எனது பழைய பதிவினைக் காண தமிழகத்தில் அங்கக சான்றளிப்புத் துறை

இயக்குநர்,
அங்கக சான்றளிப்புத் துறை,
1424 எ, தடாகம் சாலை,
ஜி.சி.டி. போஸ்ட்கோவை- 641 013
தொலைபேசி எண் : 0422-2435080
பேக்ஸ் : 0422-2457554
மின்னஞ்சல் : tnocd@yahoo.co.in

Friday, October 23, 2009

மண்புழு உரப்படுகை - எளிய தொழில்நுட்பம்

எதிர்பார்த்தபடி அக்ரி இன்டெக்ஸில் சில எளிய தொழில் நுட்பங்களை காட்சிக்கு வைத்திருந்தார்கள்.அவைகளில் ஒன்று மண்புழு உரம் தயாரிக்க உதவும் மண்புழு உரப்படுகை. மண்புழு உரம் தனியாக தேவைப்படுவதால் நாமே இதனை வாங்கி உபயோகிக்கலாமென்று வாங்கி நிறுவி பார்த்ததில் எளிமையாக உள்ளது. நிறுவுவதும் மிக எளிது. காற்று படுகையினுள் சென்றுவர வசதியாக வலைஅமைப்பு உள்ளது.மண்புழுகுளியல் நீர் (Vermiwash) எளிதாக எடுப்பதற்கு வசதி தந்திருப்பது இதன் சிறப்பு. அமைக்கும் போது இந்தப் பகுதி தாழ்வாக இருக்கமாறு அமைத்தால் எளிதாக மண்புழுகுளியல் நீர் சேகரிக்கலாம்.கட்டிடம் ,கூரை தேவையில்லையென தோன்றுகிறது. தேவைப்படின் இதற்கு மேலாகவே HDPE Sheet கொண்டு மிக எளிதாக கூரை அமைக்கலாம். வழக்கம் போல் எறும்புத் தொல்லை உண்டு. படுகையைச் சுற்றி மஞ்சள் பொடி இட வசதியாக உள்ளது. எறும்பு மருந்து இடுபவர்களுக்கும் வசதிதான் உரப்படுகையை சுற்றி இட்டாலும் புழுக்களுக்கும் மருந்திற்கும் இடையே உரப்படுகையிருப்பதால் புழுக்களுக்கு சேதம் இல்லை. மாடித்தோட்டத்தில் கூட பயன்படுத்த உகந்தது.
தொடர்பிற்கு
ஸ்ரீ அர்ஜுன் தார்ப்பாலின் இண்டஸ்ட்ரீஸ்
47, ராஜாஜி ரோடு,
சேலம். 636 007
செல் : 94422-12345

Monday, October 19, 2009

சந்தை விரிவாக்கத்துறை- தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகம்

உழவு செய்பவர்களுக்கும் உண்பவர்களுக்கும் இடையில் நடக்கும் காரியங்கள் இருவரையுமே துக்கத்தில் ஆழ்த்திவிடுகின்றன. இடையில் இருப்பவர் எந்தவித உழைப்பின்றி பதுக்கல், பேரம், முன்வர்த்தகம், என்று பணம் பார்த்துவிடுகிறார். இதனை சரிசெய்ய தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகம் “சந்தை விரிவாக்கத் துறை” என்ற துறையை 14-05-09 முதல் துவக்கி செயல்படுத்திவருகின்றனர்.

நோக்கம் :

# வேளாண் விளைபொருட்கள் உற்பத்தியாளர் குழுக்கள்அமைத்து தொகுப்புக்களாக செயல்பட பயிற்சி அளித்தல்.
To promote commodity based farmers groups.

# வணிக, நிதி, காப்பீடு மற்றும் வேளாண் தொழில் சார்ந்த நிறுவனங்களுடன் இணைப்பை ஏற்படுத்தி விவசாயிகள் (குழுக்கள்)/உற்பத்தியாளரின் பொருட்களுக்கு மேம்பட்ட சந்தை வாய்ப்புக்களை ஏற்படுத்துதல்.
To promote Institutional linkages for commodity groups for better marketing.

# விளைபொருள் உற்பத்தியாளர்கள் மற்றும் கொள்முதல் செய்பவர்களுக்கிடையே ஒருங்கிணைப்பு கருத்தரங்குகளை நடத்துதல்.
Conduct workshops on linking markets and farmers and organize buyer- seller meets.

# சந்தை நிலவரம் பற்றிய தகவல்களை சேகரித்து, அதனை பிற 29 வேளாண் அறிவியல் நிலையங்கள் மற்றம் வேளாண் துறையுடன் பகிரந்து கொள்ளுதல்.
To scout the market information and share it with all 29 KVKs and line departments.

# சந்தையில் விலை மாற்றங்கள், சந்தை தகவல்கள் குறித்து விரிவாக்கப் பணியாளர்களுக்கு பயிற்சி அளித்தல்.
To offer master training to developmental workers on market forces,intelligence and informationsystems.

# தமிழ்நாடுஅரசின் வேளாண்மை மற்றும் வேளாண் சார்ந்த துறைகளில் பணிபுரியும் அலுவலர்களுக்கு விற்பனை மேலாண்மை குறித்த பயிற்சி அளித்தல்.
To provide training on marketing management to line department Officials.

இத்துறை மாநில வேளாண் வணிக மற்றும் தொழில் துறை இயக்குநரகம், வேளாண் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு மையம் (APEDA) , முறைசார்ந்த மற்றும் முறை சாராத சந்தைகள், கொள்முதல் செய்வோர் மற்றும் விற்பனையாளர்களிடம் இணைப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்பிற்கு :

பேராசிரியர் மற்றும் தலைவர்
சந்தை விரிவாக்கத்துறை
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகம்
கோயம்புத்தூர். 641 003.
தொலைபேசி : 0422-6611315.
Source : சந்தை விரிவாக்கத்துறை- தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகம் கையேடு.

Tuesday, October 6, 2009

அக்ரி இன்டெக்ஸ் 2009 - சில தகவல்கள், சில காட்சிகள் -2

சிரோஹி இன ஆடு
பீட்டல் இன ஆடு
வடஇந்திய ஆடுகளான சிரோஹி மற்றும் பீட்டல் இனங்களை காட்சிக்காக “கண்மணி மார்டன் பார்மஸ்” (98940-45389) வைத்திருந்தார்கள். ஏழைகளின் பசு என்றால் அது மிகையில்லை. பீட்டல் இன ஆடுகள் சுமார் 4 லிட்டர் பால் (குட்டிகளுக்கு போக) தருவதாக கூறினார்கள். விற்பனையும் உண்டு.
டெல்லியிருந்து அழகுசெடிகள்,ஆர்கிட் வகைகள் வைத்திருந்தார்கள். ஜின்செங் வேரில் பைகஸ் வகை செடியை ஒட்டுச் செடியாக்கி வைத்திருந்தார்கள் விலை ரூ.500/= தான். வெளிநாட்டு பூக்களின் கிழங்குகளை வைத்திருந்தார்கள் விலை சற்று அதிகமென தோன்றியது.
லின்ட்சே கார்போரேஷனின் (Lindsay Corporation) தண்ணீரை சிக்கனமாக தெளிக்கும் அமைப்பை காட்சிக்காக வைத்திருந்தார்கள். நிறுவுவதற்கு கணிசமான தொகை தேவைப்படும் என தோன்றுகிறது. கம்பெனி விவசாயத்திற்கு ஏற்றது. அனைவரையும் கவர்ந்தவர்கள் இந்த மிக உயரமான கலைஞர்கள்தான். கூட்டதிற்கிடையே மிக எளிதாக வலம் வந்து அசத்தினார்கள்.
ஓய்வு

Friday, October 2, 2009

அக்ரி இன்டெக்ஸ் 2009 - சில தகவல்கள், சில காட்சிகள்.

எதிர்பார்த்ததை போலவே கோவை அக்ரி இன்டெக்ஸ் 2009 இல் சில விலை குறைந்த எளிய தொழில் நுட்பங்கள் இடம் பெற்றிருந்தது மகிழ்ச்சியை தந்தது. விரிவாக பின்பு எழுதுகிறேன்.ரூ.1,000/=+ இல் மண்புழுஉரப்படுகை. நகர விவசாயத்திற்கு ஏற்றது. குறிப்பாக மாடித் தோட்டத்திற்கு மிகவும் ஏற்றது. (மாதிரி)
ரூ. 5,000/= செலவில் சாண எரிவாயு அமைப்பு. கட்டிட வேலை தேவையில்லை. (மாதிரி)
ரூ. 30,000/= க்கு 300 வாட் சக்தி கொண்ட காற்றாலை (Wind mill)
ரூ. 58,000/= க்கு விலை குறைந்த பவர் டில்லர். உழுவதற்கு, களை எடுப்பதற்கு,பாத்தி பிடிக்க, கால்வாய் எடுக்க, உரமிட என அனைத்து வேலைகளையும் செய்யும்.
பூக்களைக் கொண்டு உருவாக்கப் பட்ட பூஜாடி.
விவசாயி ஒருவரின் வெட்டிவேர் பொருட்கள்.

வாழை விவசாயமும், 10 நிமிடக் காற்றும்


குலையுடன் சாய்ந்துள்ள மரங்கள்
இந்த காற்றைக் கவனத்தில் கொண்டு பாதுகாப்பிற்காக அவைகளை சுற்றி கயிறுகள் கட்டியதால் சற்று தப்பிய மரங்கள்.
சென்ற வாரம் அடித்த காற்றில் அன்னூர், அவினாசி பகுதிகளில் 1 லட்சத்திற்கும் அதிகமான வாழை மரங்கள் சாய்ந்து கிடந்ததைப் பார்த்து மனம் அதிக வேதனையடைந்தது. இன்றைய விவசாய இக்கட்டுகளைத் தாண்டி முதலீடு, கடுமையான உழைப்பு என 1 வருடமாக செய்து 10 நிமிடக் காற்று அவர்களின் முதலீட்டை, உழைப்பை வீணாக்கியது. இதில் பயிர் காப்பீட்டில் வேறு சிக்கல் இருப்பதாக நண்பர்கள் கூறியது மேலும் கவலையளித்தது. பயிர் காப்பீடு விவசாயத்திற்கு மிக முக்கியமான ஒன்றாகவிட்டது. மத்திய அரசு தள்ளுபடிகளையும், இலவசங்களையும் தவிர்த்து பயிர் காப்பீட்டில் கவனம் செலுத்த வேண்டிய நேரமிது.

Thursday, October 1, 2009

அக்ரி இன்டெக்ஸ் 2009

இந்த வருடமும் கொடீசியா வளாகத்தில் 9 வது முறையாக அக்டோபர் 2 தேதி முதல் 5 தேதி வரை இந்த விவசாய கண்காட்சி நடைபெறுகிறது. சென்ற சில ஆண்டுகளாக சுமாராக இருந்தது. இந்த வருடம் வேளாண்மை பல்கலைகழகமும் இணைந்து நடத்துகிறார்கள். விவசாயம் பல்வேறு காரணங்களால் கேள்விக்குறியாகி வரும் வேளையில் தொழில் நுட்பங்கள் இருக்கும் என எதிர்பார்க்கிறேன். பொதுவாக இது போன்ற கண்காட்சிகள் நமது சிந்தனைகளை, செயல்பாடுகளை ஏதோ ஓரு விதத்தில் மாற்றும். இன்றைய நிலைமையில் மாற்றம் தேவை. எனவே உங்கள் அனைவரையும் வருக வருக என அன்புடன் அழைக்கிறேன்.

இடம் : கொடீசியா வளாகம், அவினாசி சாலை, கோவை.
நாள் : அக்டோபர் 2 முதல் 5 தேதி வரை