Friday, June 5, 2009

உலக சுற்றுச்சுழல் தினம் 5 ஜுன் 2009


பஞ்ச பூதங்களை நாம் விஞ்ஞானம் என்ற பெயரில் மாசுபட வைப்பது அல்லது இயற்கை செல்வங்களை தேவைக்கு அதிகமாக சுரண்டுவது, இவைதான் தட்பவெப்ப மாறுபாடிற்கு அடிப்படை காரணங்கள். இயற்கையின் மிக சிறிய மாறுதல்களைக் கூட நம்மால் தாங்கிக்கொள்ள முடிவதில்லை என்பதே காலம் நமக்கு சொல்லித் தந்த பாடம். தூங்கிக் கொண்டிருக்கும் நம்மை எழுப்பி இயற்கை தந்த பாடங்களை நமக்கு அறிவித்து இயற்கையை ஆராதிக்க ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சுழல் அமைப்பு (UNEP) ஜுன் 5 நாளை “உலக சுற்றுச்சுழல் தினம்” என்று அறிவித்து நம்மை ஈடுபட வைத்து கொண்டாடிவருகின்றனர்.

உங்கள் கிரகத்திற்கு நீங்கள் தேவை.
ஒன்றுபட்டு தட்பவெப்ப மாறுபாட்டை எதிர்த்து போராடுவோம்.

Your Planet Needs You.
UNite to Combat Climate Change.

மேற்கண்ட வாசகம் இந்த வருட உலக சுற்றுச்சுழல் தினத்திற்கான மையப்பொருள்.


மெக்சிகோ நாட்டில் இன்று ( 5 ஜுன் 2009 ) உலக சுற்றுச்சுழல் தினம் கொண்டாடப்படுகிறது. ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சுழல் அமைப்பு (UNEP) மெக்சிகோ நாட்டுடன் இணைந்து இந்த வருட செயல்பாட்டில் ஈடுபடுகிறது. மெக்சிகோ நாடு UNEP யின் பில்லியன் மரங்கள் இயக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த வருடம் சுமார் 700 கோடி மரங்கள் நடுவது என்று UNEP தீர்மானித்துள்ளனர். பில்லியன் மரங்கள் செயல்பாட்டில் சுமார் 25% மரங்களை மெக்சிகோ நாட்டு மக்கள் நடவுள்ளனர். நாம் என்ன செய்யப் போகிறாம்??? குறைந்த பட்சம் ஒரு மரமாவது இந்த வார இறுதிக்குள் நடுவோம்.

புவி வெப்பத்திற்கெதிராய் நம்மால் முடிகின்ற 20 செயல்கள். காண.

http://maravalam.blogspot.com/2007/06/20_24.html

4 comments: